சிங்கப்பூரில் தானியங்கி வாகனப் பரிசோதனை நிலையம் 2016ல் திறக்கப்பட்டது. அது முதல் 40க்கும் மேற்பட்ட ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு சிங்கப்பூர் சாலைகளில் பரிசீலித்துப் பார்க்க அங்கீ காரம் வழங்கப்பட்டு உள்ளது.
ஓட்டுநர் இல்லாத டாக்சிகள், இடைவழி சிறு பேருந்துகள், பேருந்துகள், சாலைகளைத் துப்புரவு செய்யும் வாகனங்கள் ஆகியவை அத்தகைய ஓட்டுநர் இல்லாத வாகனங்களில் உள்ளடங்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தானியங்கி வாகன உன்னதப் பரிசோதனை ஆய்வு நிலையம்-நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அந்த வாகனங்களுக்குச் சான்றிதழ் அளித்துள்ளது.
இதர பத்து வாகனங்கள் பொது வழிகளில் செயல்படும் வகையில் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
உணவுப்பொருள்கள், சாதனங்களைக் கொண்டு கொடுப்பது, மேற்பார்வையிடுவது போன்ற பணிகளை அத்தகைய வாகனங்கள் செய்யும்.
அரசும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் 2017ல் தானியங்கி வாகனப் பரிசோதனை நிலையத்தை அமைத்தன. அங்கு அத்தகைய வாகனங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு அவற்றைப் பரிசோதிக்க முடியுமா என்பதற்கான சான்றிதழை அந்த நிலையம் வழங்குகிறது.
பேருந்துகளை உட்படுத்தி மேலும் பல பரிசோதனைகளை நடத்த ஏற்கெனவே திட்டங்கள் இருப்பதாகத் தெரிகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தானியங்கி வாகனக் கண்காட்சி நேற்று தொடங்கியது. அத் தகைய வாகனங்களுக்குச் சிங்கப்பூர் எப்படி தயாராகிறது என்பதை அதில் தெரிந்துகொள்ளலாம்.

