வர்த்தக சபை, சங்க ஆற்றல் மேம்பட செயல்திட்டம் தொடக்கம்

வர்த்தக சபை, சங்க ஆற்றல் மேம்பட செயல்திட்டம் தொடக்கம்

2 mins read
a3edf861-5f75-4539-8d79-a6e30a74c411
-

சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் வர்த்­த­கச் சங்­கங்­களும் சபை­களும் தங்­களுடைய மூலா­தார ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்­திக்கொள்ள ஏது­வாக புதிய ஒரு செயல்­திட்­டம் தொடங்­கப்­பட்டு இருக்­கிறது.

அந்­தச் செயல்­திட்­டம் பரி­ண­மிக்­கின்ற புதிய போட்­டித்­தி­றன்­களைப் பலப்­ப­டுத்­தும். அதனால் ஊழி­யர்­க­ளின் தேர்ச்­சி­கள் மேம்­படும் என்று தெரி­விக்­கப்­ட்டது.

என்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர், சிங்­கப்­பூர் வர்த்தகச் சம்மேளனம், ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வு­டன் சிங்­கப்­பூர் சீன வர்த்­தக தொழிற்­சபை அந்­தப் புதிய செயல்­திட்­டத்தை மேற்­பார்­வை­யி­டு­கிறது.

30க்கும் மேற்­பட்ட வர்த்­த­கச் சங்­கங்­கள், சபை­க­ளு­டன் ஏறத்­தாழ ஆறு மாத காலம் பல­வற்­றை­யும் கலந்து ஆலோ­சித்து அதற்­குப் பிறகு அந்­தச் செயல்­திட்­டத்தை 'எர்ன்ஸ்ட் அண்ட் யாங்' நிறு­வனம் உரு­வாக்கி இருக்­கிறது.

அந்­தச் செயல்­திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்­தது. வர்த்­தக தொழில் துணை அமைச்­சர் திருவாட்டி லோ யென் லிங் அந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார்.

"கொவிட்-19 கார­ண­மாக இது­வரை இல்­லாத அள­வுக்கு உல­கம் முழு­வ­துமே பல தொழில்­து­றை­களுக்­குச் சவால்­கள் ஏற்­பட்டு இருக்­கின்­றன.

"நிறு­வ­னங்­கள் தொடர்ந்து போட்­டித்­தி­ற­னோ­டும் காலத்­திற்கு ஏற்­ற­வை­யா­க­வும் இருந்து வரும் வகை­யில் தாங்­கள் செயல்­படும் விதத்தை மாற்றி அமைத்­துக் கொண்டு வரு­கின்­றன.

"இத்­த­கைய ஒரு நிலை­யில், வர்த்­த­கச் சங்­கங்­களும் சபை­களும் நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வு­வ­தில் மிக முக்­கிய பணியை ஆற்­று­கின்­றன," என்று திரு­வாட்டி லோ தனது உரை­யில் குறிப்­பிட்­டார்.

அந்த உத­வி­யு­டன் நிறு­வ­னங்கள் தாங்­கள் எதிர்­நோக்­கும் சவால்­களைச் சமா­ளித்து புதிய வாய்ப்பு­களைப் பயன்­ப­டுத்­திக்கொள்ள முடி­யும் என்­றார் அவர்.

புதிய சூழ­லுக்கு ஏற்ற தேர்ச்­சி­களை அடை­யா­ளம் காண சங்­கங்­க­ளுக்­கும் சபை­க­ளுக்­கும் உத­வும் வகை­யில் புதிய செயல்­திட்­டம் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.

நிறு­வ­னங்­கள் உரு­மாறி மேம்­படு­வ­தற்கு மேலும் ஆத­ரவு அளிக்கத் தேவை­யான புதிய தேர்ச்சி­களை அந்­தச் செயல்­திட்­டத்­தின் மூலம் வர்த்­த­கச் சபை­களும் சங்­கங்­களும் பெற­லாம் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"கொவிட்-19 பாதிப்­பு­களில் இருந்து மீண்டு வரக்­கூ­டிய மிக முக்­கி­ய­மான கட்­டத்­தில் பொரு­ளி­யல் இருக்­கிறது.

"இந்த நேரத்­தில் வர்த்­த­கச் சபை­களும் சங்­கங்­களும் மூன்று முக்­கிய பணி­களை மேற்­கொண்டு நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ முடி­யும்," என்று திரு­வாட்டி லோ யோசனை தெரி­வித்­தார். ஆலோ­சனை, இணைந்து செயல்­ப­டு­தல், புத்­தாக்­கம் ஆகி­யவை அந்த மூன்று துறை­கள் என்று அவர் கூறி­னார்.

இத­னி­டையே, உள்­ளூர் நிறு­வனங்­களுக்கு மேலும் சிறந்த முறை­யில் ஆத­ரவு அளிக்­கும் வகை­யில் வர்த்­த­கச் சபை­களும் சங்­கங்­களும் மேம்­ப­ட­வும் தேவை­யான புதிய ஆற்­றல்­க­ளைப் பெற­வும் இந்­தப் புதிய செயல்­திட்­டம் உத­வும் என்று சிங்­கப்­பூர் சீன வர்த்­த­கச் தொழிற்­சபை­யின் தலை­வர் ரோனல்டு இங் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

வர்த்­த­கச் சபை­கள் மற்­றும் சங்­கங்­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்சிப் படிப்­பு­களை உரு­வாக்­கும் நோக்­கத்­தில் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் சிங்­கப்­பூர் சீன வர்த்­தக தொழிற்­சபைக்கும் நன்­யாங் பல­துறைத் தொழிற்கல்­லூ­ரிக்­கும் இடை­யில் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.