நுரையீரல்களில் ரத்தக் கட்டிகளை எடுக்க புதிய உத்திகள்

நுரையீரல்களில் ரத்தக் கட்டிகளை எடுக்க புதிய உத்திகள்

1 mins read
7c76f982-8444-4feb-bdeb-bbf6d220a991
நுரையீரல்களில் உருவாகும்ரத்தக் கட்டிகளை உறிஞ்சி எடுக்கப் பயன்படுத்தப்படும் கருவி.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் நுரை­யீ­ரல்­களில் ரத்­தக் கட்­டி­கள் உள்ள நோயா­ளி­களால் இனி கிட்­டத்­தட்ட அபா­யம் அறவே இல்­லாத சிகிச்­சையை மேற்­கொள்ள­ மு­டி­யும். இதன் மூலம் சம்­பந்­தப்­பட்ட நோயா­ளி­கள் உயிர் பிழைப்­ப­தற்­கான சாத்­தி­யம் 98 விழுக்­காட்­டுக்­கு மேல் அதி­கரித்துள்ளது.

நுரை­யீ­ரல்­களில் ரத்­தக் கட்­டி­கள் உருவாவதற்குப் பெயர் 'பல்­மோ­னரி எம்­போ­லி­சம்'. கவ­லைக்­கி­ட­மாக இருக்­கும் கொவிட்-19 நோயா­ளி­களில் நான்­கில் ஒரு­வருக்கு இந்த நிலை ஏற்­ப­டு­கிறது.

இந்­நிலை எழும்­போது நோயாளி­க­ளின் நுரை­யீ­ரல்­களில் உள்ள ரத்­தக் குழாய் ஒன்­றில் கட்­டி­கள் உரு­வா­கும்.

இத­னால் நுரை­யீ­ரல்­க­ளுக்கு ரத்­தம் போவது தடை­படும், போது­மான உயிர்வாயுவும் செல்­லாது. இத­னைத் தொடர்ந்து நோயா­ளி­யின் உட­லில் உயிர்வாயு­வின் அளவு குறை­யும்.மேலும், நுரை­யீ­ரல் ரத்­தக் குழா­யில் ஏற்­படும் இடை­யூ­றைச் சரி­செய்ய இத­யம் கூடு­தல் வேகத்­தில் செயல்­ப­டும்­போது மார­டைப்பு ஏற்­ப­ட­லாம். இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண 'பெர்ட்' எனப்­படும் நுரை­யீரல் ரத்­தக் குழாய் அடைப்பு செயற்­குழு, அபா­யமற்ற இரண்டு சிகிச்சை முறை­களை அறி­மு­கம் செய்­துள்­ளது. இக்­குழுவில் பல்­வேறு திறன்­களில் கைதேர்ந்த மருத்­து­வர்­க­ள் இடம்பெற்றுள்ளனர்.

'அல்ட்­ரா­ச­வுண்ட்' முறை வாயி­லாக ரத்­தக் கட்­டியை உடைப்­பது இப்­பி­ரச்­சி­னைக்­கான புதிய தீர்­வு­களில் ஒன்று. மற்­றொன்று, ரத்­தக் கட்­டியை உறிஞ்சி எடுப்­பது.

நுரை­யீ­ரல்­களில் உரு­வான ரத்­தக் கட்­டி­களை உறிஞ்சி எடுக்­கும் முறையை ஆசிய கண்­டத்­தில் பின்­பற்­றி­யுள்ள முதல் குழு என்ற பெருமை 'பெர்ட்'டைச் சேரும். தென்­கி­ழக்­கா­சி­யா­வில் 'அல்ட்­ரா­சவுண்ட்' முறை­ வாயி­லாக ரத்­தக் கட்­டி­களை உடைக்­கும் முதல் குழு­வும் இதுவே.