கேப்பிட்டாலேண்ட் நிறுவனம் அதன் 29 மாடி அலுவலகத்தை நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தது.
நீடித்த நிலைத்தன்மை, அறிவார்ந்த அம்சங்களுடனான இந்த அலுவலகம் 79 ராபின்சன் சாலையில் மத்திய வர்த்தக வட்டாரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
பழைய மத்திய சேமநிதிக் கழகக் கட்டடம் இருந்த இடத்தில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் இந்த உயர்தர கட்டடம் கட்டப்
பட்டுள்ளது.
உணர் கருவிகளைப் பயன்
படுத்தும் மின்தூக்கிகளைப் புதிய அலுவலகம் கொண்டுள்ளது.
எரிசக்தி சேமிப்பை மனதில் கொண்டு மின்தூக்கிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டடம் கேப்பிட்டாலேண்ட் நிறுவனம், ஜப்பானிய நிறுவனங்களான மிட்சுயி அண்ட் கோ நிறுவனம் மற்றும் தோக்கியோ
டெமோனோ நிறுவனம் ஆகிய
வற்றுக்குச் சொந்தமாகும்.
கட்டடத்தில் உள்ள அலுவலக இடங்களை வங்கிகள், சட்டத்துறை, விமானச் சேவை, தொலைத்
தொடர்பு போன்ற பல்வேறு துறை
களைச் சேர்ந்த 16 பன்னாட்டு நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளன.
கட்டடத்தின் 27வது மற்றும் 28வது மாடியில் சிறப்பு அலுவலக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு 'தி ஸ்கை வில்லேஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விடங்களை போஸ்டன் ஆலோசனைக் குழுமம் வாடகைக்கு எடுத்துள்ளது.
கட்டடத்தின் குத்தகைதாரர்கள் பிரிட்ஜ் பிளஸ், கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் நீக்குப்போக்கான வேலையிட ஏற்பாடுகள், சமூகத் தளம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் புதிய கட்டடத்தில் மேசைகளைப் பகிர்ந்துகொள்ளும் முறை, தனி அறைகள்,
கலந்துரையாடல்களுக்கான அறைகள், போன்றவை வாடகைக்கு விடப்பட்டு வருகின்றன.
மாதந்தோறும் $550 செலுத்தி மேசைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கக்கூடிய தனி அறைகளின் மாத வாடகைத் தொகை $850 ஆகும்.
கட்டடத்தின் அதிகாரபூர்வத் திறப்பு விழாவின் சிறப்பு விருந்தி னராக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.
புதிய அலுவலகம் வழக்கமான அலுவலகங்களையும் நீக்குப்
போக்கான வேலையிடங்களையும் உள்ளடக்கி இருப்பது குறித்து அமைச்சர் லீ மகிழ்ச்சி தெரிவித்தார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை, அலுவலகத்தில் இல்லாத வேறு இடங்களிலிருந்து வேலை செய்வது ஆகியவை குறித்து தேசிய வளர்ச்சி அமைச்சு ஆய்வு நடத்தி அதற்கு ஏற்ப நிலங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் பரிசீலனை செய்யும் என்றார் அவர்.
புதிய கட்டடத்துக்கு கட்டட, கட்டுமான ஆணையத்தின் பசுமை முத்திரை பிளாட்டினம் விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2020ன் இலக்கிற்கு ஏற்ப கரிம வெளியேற்றத்தைக் குறைக்க
உதவும் வகையில் கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

