காலாங் பாருவில் உள்ள மேம்
பாலத்துக்கு அடியில் கண்டெக்கப்பட்ட எலும்புக்கூடு யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிறது.
மரபணுச் சோதனைகள் நடத்தப்பட்டும் காணாமல் போன 18 பேருடன் அதை ஒப்பிட்டுப் பார்த்தும் எலும்புக்கூடு யாருடையது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மரணத்துக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மரண விசாரணை அதிகாரி இம்மாதம் 11ஆம் தேதியன்று தீர்ப்பளித்தார்.
இறந்தவரின் அடையாளம் தெரியாவிடினும் அவர் 30
வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆசிய ஆடவர் என்று பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதியன்று எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு ஆறு மாதங்களி
லிருந்து ஓராண்டுக்கு முன்பு
மரணம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலத்துக்கு அடியில் தளவாடப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் மண்டை ஓட்டைப் பார்த்து நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்ததாகத் அறியப்படுகிறது.

