ஜிஎஸ்டி வரி உயர்வை தவிர்க்க இயலாத அளவுக்கு சூழ்நிலை

ஜிஎஸ்டி வரி உயர்வை தவிர்க்க இயலாத அளவுக்கு சூழ்நிலை

4 mins read
9fa6b27e-7888-49c7-aad1-b3dc351926b1
-

முரசொலி

ஒவ்­வொரு நாடும் அர­சாங்­க­மும் வரு­வாய்க்கு ஏற்ப செல­விட லேண்­டும். வரு­வாய் பெருக வழி காண வேண்­டும். அந்த வழி உலக முத­லீ­டு­க­ளைக் கவர்­வதாக இருக்க வேண்­டும்; நாட்­டின் போட்­டித்­திறனைக் கூட்­டு­வ­தாக இருக்க வேண்­டும். அதைவிட முக்கியமாக நிறு­வ­னங்­களும் மக்­களும் அதனால் பெரி­தும் பாதிக்­கப்படக்கூ­டாது.

விரும்­பிய பல­னைத் தரக்­கூ­டிய அத்­த­கைய ஓர் ஏற்­பாட்டை நடப்­பில் வைத்து இருந்து தொடர்ந்து முன்­னேற்­றம் காண வேண்டுமானால் விவே­க­மான முடிவுகள் ஒரு நாட்­டுக்கு முக்கி­ய­மா­னவை.

அது­வும் சிங்­கப்­பூ­ரைப் போன்ற இயற்கை வளம் இல்­லாத, உல­கப் பொரு­ளி­ய­லு­டன் அணுக்க தொடர்பு கொண்டு ஏற்­று­ம­தியை அதி­கம் சார்ந்­துள்ள ஒரு நாட்­டுக்கு அத்­த­கைய ஓர் ஏற்­பாடு மிக­மிக அவசிய­மா­னது என்­ப­தைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை. அர­சுக்கான வரு­டாந்­திர நிரந்­தர வருவாயில் வரிகள் மூலம் கிடைக்கும் வரு­வாய் முக்­கி­ய­மான ஓர் அங்­கம். இதில் நிறு­வ­னங்­கள் செலுத்­தும் வரி­யும் தனி­ந­பர் வரி­யும் நேரடி வரி­கள்.

நிறு­வ­னங்­க­ளுக்கு அதிக வரி விதித்­தால் அவற்­றின் போட்­டித்­தி­ற­னுக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டும். தனி­ந­பர் வரி­ கூ­டி­னால் அவர்­கள் செல­வி­டும் தொகை குறை­யும். ஆகை­யால் இவற்­றைக் கூடு­மா­ன­வரை குறைத்­து­ வைத்­தி­ருக்­க­வேண்­டும்.

அதே வேளை­யில், அர­சுக்கு வரு­வாய் கூட­வேண்­டும். இதற்­கா­கத்­தான் பொ­ருள், சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரி, மறை­முக வரி­யாக 1994ல் நடப்­புக்­கு வந்­தது. முத­லில் 3% ஜிஎஸ்டி விதிக்­கப்­பட்­டது. பிறகு 2003ல் அந்த வரி 4% ஆகி­யது. 2004ல் 5%க்கு கூட்­டப்­பட்­டது. கடை­சி­யாக 2007ல் அந்த வரி 7% ஆகி­யது. அது முதல் அந்த வரி அப்­ப­டியே இருந்து வரு­கிறது. உல­கி­லேயே. ஆசி­யா­வி­லேயே ஆகக் குறை­வாக ஜிஎஸ்டி வரி விதிக்­கப்­படும் நாடு­களில் சிங்­கப்­பூர் ஒன்று.

ஜிஎஸ்டி வரி கார­ண­மாக மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் சுமை­யைக் குறைக்க ஒவ்வொரு முறையும் பல வழி­களில் நிவாரண உத­வி­கள் அறி­மு­கப்­படுத்­தப்­பட்­டன. நிறுவன வரி, தனிநபர் வரி கணிசமாகக் குறைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரியை வரும் 2025க்கு முன்­ன­தாக 7%லிருந்து 9%ஆக உயர்த்த ஏற்­கெனவே திட்டம் உள்­ளது. அந்த வரியை அதி­க­ரிக்க வேண்­டிய அவ­சி­யம் இருந்­தும் பொரு­ளி­யல் சூழலுக்கு ஏற்ப, அண்­மைய கொரோனா தொற்று கார­ண­மாக அது ஒத்­தி­வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல்­வேறு நில­வ­ரங்­க­ளை­யும் கருத்­தில்கொண்டு பார்க்­கை­யில் அந்த வரியை உயர்த்த வேண்­டிய தரு­ணம் இப்­போது வந்­துள்­ள­தா­கவே தெரி­கிறது.

நாடா­ளு­மன்­றத்­தில் அடுத்த மாதம் புதிய வரவு செல­வுத் திட்­டம் தாக்­க­லா­கிறது. அதில் ஜிஎஸ்டி வரி பற்­றிய முக்­கிய அறி­விப்­பு­கள் இடம்­பெ­றும். அதற்குப் பிற­கு­தான் எப்­போது ஜிஎஸ்டி வரி உயரும் என்­பது தெரி­ய­வ­ரும்.

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் அதி­க­ரிக்­கிறது. இந்த நிலை­யில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்­பெற்­றால் அத­னால் பாதிப்பு அதி­க­மாக இருக்­கும் என்று நிலவும் கவ­லை­ புரிந்­து­கொள்­ளக் கூடி­ய ஒன்றுதான்.

ஒட்­டு­மொத்த பண­வீக்­கம் ஒன்­பது ஆண்­டு­காலத்­தில் இல்­லாத அள­வுக்கு கடந்த நவம்­ப­ரில் 3.8% ஆக இருந்­தது. இது, இந்த ஆண்­டில் இன்­னும் கூடு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் உள்­ளன. அதே­போல மூலா­தார பண­வீக்­கம் இப்­போ­தைய 1.6%ல் இருந்து அதி­க­ரிக்­கும் வாய்ப்­பும் உண்டு.

இது ஒரு­பு­றம் இருக்­கட்­டும். கடந்த இரண்­டாண்டு காலத்­தில் அர­சாங்­கத்­திற்கு $75 பில்­லியனுக்­கும் மேற்­பட்ட அள­வுக்கு ஒட்­டு­மொத்த நிதிப் பற்­றாக்­குறை ஏற்­பட்டு இருக்­கிறது.

சேமிப்­பில் இருந்து $53.7 பில்­லி­யன் பணத்தை அர­சாங்­கம் எடுத்து இருக்­கிறது. கொவிட்-19 தொற்று இன்­ன­மும் முடிந்தபாடில்லை.

இந்­தச் சூழ்­நி­லை­யில், மேலும் கணி­ச­மான பணத்­தைச் செல­விட வேண்­டிய தேவை, நீண்­ட­கா­லப் போக்­கில் சுகா­தா­ரம், சமூக பாது­காப்பு ஏற்­பா­டு­கள், உள்­கட்­ட­மைப்பு வச­தி­களில் பெரும் பணத்­தைச் செல­வி­டு­வ­தற்­கான அவ­சியம் இருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு நிலை­யில் அந்­தக் கூடுதல் செல­வு­களை ஈடு­கட்ட மக்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­படாத வகை­யில் வரு­வாயைப் பெருக்க அர­சாங்­கம் வழி காண வேண்­டும். இதற்கு ஜிஎஸ்டி வரியைத் தவிர்த்து இப்­போ­தைக்கு வேறு வழி இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. வரு­மான வரியை உயர்த்­தி­னால் போட்­டித்­தி­றன் பாதிக்­கப்­பட்­டு­வி­டும்.

தனி­ந­பர் வரு­மான வரி­யைச் செலுத்­து­வோர் அள­வும் மக்­கள்­தொ­கை­யில் 30 விழுக்­காடு அள­வுக்­குத்­தான் இருக்­கிறது. சொத்து வரி, கார்­பன் வரி போன்­ற­வற்றை அதி­க­ரித்­தா­லும் கூட அவற்றால் கணி­ச­மான அள­வுக்கு அர­சுக்கு வரு­வாய் வர வாய்ப்­பில்லை. இந்த ஆண்­டின் இரண்­டா­வது பாதியில் பண­வீக்க நெருக்­கடி கொஞ்­சம் தணி­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனா­லும்­கூட அத்­த­கைய ஒரு நிலை நிச்­ச­ய­மாக ஏற்­படும் என்­பதை உறுதி செய்­யக்­கூ­டிய அள­வுக்கு நில­வ­ரங்­கள் இப்­போது உறு­தி­யா­கத் தெரி­ய­வில்லை. இத்­த­கைய சூழ­லில் ஜிஎஸ்டி வரியை உயர்த்­தி­தான் ஆக வேண்­டும் என்ற ஒரு நெருக்­கடிக்கு அர­சாங்­கம் ஆளாகி இருக்­கிறது.

ஜிஎஸ்டி வரி உயர்வு கார­ண­மாக மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய கூடு­தல் சுமை­யைச் சமா­ளிக்க பெரும்­பா­லான குடும்­பங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் ஏற்­கெ­னவே $6 பில்­லி­யன் உத்­த­ர­வா­தத் தொகுப்புத் திட்­டம் ஐந்­தாண்டுக்கு நடப்­பில் இருக்­கிறது.

குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைப் பொறுத்­த­வரை இந்த உதவி 10 ஆண்டு காலத்­திற்­குத் தொட­ரும். ஜிஎஸ்டி வரி உய­ரும்­பட்சத்தில் ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்­டுத் திட்­ட­மும் அதற்­கேற்ப மேம்­ப­டுத்­தப்­பட்டு, வரி உயர்வு கார­ண­மாக பொது­மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய சுமை குறையும் என்­ப­தில் ஐய­மில்லை.

இவற்றோடு இருந்துவிடாமல், வருங்காலத்தில் விலை­கள் கூடும்­போது அதன் தாக்­கத்தைக் குறைக்கும் வகை­யில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களின் இறக்­கு­மதிக்குப் பல­த­ரப்­பட்ட வழி­களை கண்டு இருப்­பு­களை அர­சாங்­கம் பலப்­ப­டுத்தி வர­வேண்­டும்.

நாணய பரி­வர்த்­தனைக் கொள்­கை­களை­ப் பொருத்­த­மாக திருத்தி அமைக்க வேண்­டும். எதிர்­பா­ராத வித­மாக விலை­கள் கூடும்­போது அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்பைக் குறைக்கும் வகை­யில் குடும்­பங்­களுக்குக் கூடு­தல் உதவிகளை வழங்­கு­வது பற்றியும் அர­சு பரி­சீ­லிக்­க­லாம்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் இப்­போதைக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு வேண்­டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்­தா­லும் எல்­லா­வற்­றை­யும் சீர்­தூக்கிப் பார்க்­கை­யில், ஜிஎஸ்டி வரி உயர்வு என்­பது, தாம­தப்­ப­டுத்­தக்கூடாத, தாம­தப்­ப­டுத்த முடி­யாத ஒன்­றா­கவே இருக்­கிறது என்பதே விவேகமானது.