அமைச்சர்: 51% மக்களுக்கு கூடுதல் தடுப்பூசி சாதனை அன்றாடம் 42,000 பேர் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்கள்

அமைச்சர்: 51% மக்களுக்கு கூடுதல் தடுப்பூசி சாதனை அன்றாடம் 42,000 பேர் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்கள்

2 mins read
f9434dfe-b2dc-407c-bad0-2af6be6789c0
-

சிங்­கப்­பூ­ரில் மொத்த மக்­கள்­தொகை­யில் 51 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூசி (பூஸ்­டர்) போட்டு உள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் ஃபேஸ்புக்­கில் நேற்று தெரி­வித்­தார்.

இப்­போது ஏறத்­தாழ 42,000 பேர் நாள் ஒன்­றுக்குக் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொள்­கி­றார்­கள்.

கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­வ­தால் ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய கடு­மை­யான பாதிப்­பு­க­ளைத் தவிர்த்துக்கொள்­ள­லாம்.

ஓமிக்­ரான் தொற்று சென்ற ஆண்­டில் பர­விய டெல்டா அலையை­விட வேக­மா­கப் பர­வக்­கூ­டும் என்­பதை திரு ஓங் ஏற்­கெ­னவே வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

ஆகை­யால் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யும் கூடு­தல் தடுப்­பூ­சி­யும் தொடர்ந்து முக்­கி­யத்­து­வம் பெற்­றி­ருக்­கும் என்­றார் அவர்.

ஓமிக்­ரான் தொற்று இருந்­தா­லும் கொவிட்-19 கிரு­மி­யு­டன் தொடர்ந்து வாழ­வேண்டி இருக்­கும் என்­பதே முக்­கிய அம்­சம் என்­று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அர­சாங்­கம் இந்த மாதத் தொடக்­கத்­தில் தன்­னு­டைய கொள்­கையைத் திருத்­தி­யது.

பிப்­ர­வரி 14ஆம் தேதி முதல் 18 மற்­றும் அதற்­கும் அதிக வய­துள்­ள­வர்­கள் தாங்­கள் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் என்ற நிலை­யைத் தொடர்ந்து பெற்­றி­ருக்க வேண்­டும் என்­றால் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக் கொள்ளவேண்­டும் என்று அர­சாங்­கம் வலி­யு­றுத்­தி­யது.

முதல் இரண்டு தடுப்­பூ­சி­களில் இரண்­டா­வது ஊசி­யைப் போட்­டுக் கொண்­ட­தற்­குப் பிறகு ஒன்­பது மாதங்­கள் ஆன­தும் முற்­றி­லும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர் என்ற நிலையை ஒரு­வர் இழந்து­வி­டு­வார்.

தொற்று கூடி, குறையும்

இத­னி­டையே, சிங்­கப்­பூ­ரில் ஓமிக்­ரான் அலை வேக­மா­கக் கூடி உச்­சத்தை தொடும் வாய்ப்பு இருப்­ப­தாக சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சா சுவீ ஹாக் பொதுச் சுகா­தா­ரப் பள்­ளி­யின் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக் கருத்துரைத்துள்ளார்.

தொற்று தென்­ஆப்­பி­ரிக்­கா­வில் நிகழ்ந்­த­தைப்போல உச்­சத்­தைத் தொட்டு பிறகு வேக­மாக குறைந்து­வி­டும் என்று சென்ற வாரம் அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாளி­டம் குறிப்­பிட்­டார்.

அடுத்த அலை எந்த அள­வுக்கு இருக்­கும் என்­பது சிங்­கப்­பூர் நடை­மு­றைப்­ப­டுத்­தும் கட்­டுப்­பா­டு­க­ளைச் சார்ந்­தி­ருக்­கும் என்­றும் இணைப் பேரா­சி­ரி­யர் அலெக்ஸ் குக் தெரி வித்தார்.