மின்சார வாகனங்கள் எண்ணிக்கை 2021ல் கணிசமாக அதிகரித்து 3,713 ஆக உயர்ந்தது

மின்சார வாகனங்கள் எண்ணிக்கை 2021ல் கணிசமாக அதிகரித்து 3,713 ஆக உயர்ந்தது

2 mins read
dce344ee-78d9-4c17-9e65-f8978bee3de8
-

சிங்­கப்­பூ­ரில் மின்­சார வாக­னங்­களின் எண்­ணிக்கை சென்ற ஆண்­டில் இரண்டு மடங்­கிற்­கும் மேலாக அதி­க­ரித்து உள்­ளது.

இங்கு 2020 முடி­வில் அத்­தகைய 1,397 வாக­னங்­கள் இருந்­தன. அவற்­றின் எண்­ணிக்கை சென்ற ஆண் டின் முடி­வில் 3,713 ஆகக் கூடி­யது.

அதே கால­கட்­டத்­தில் மின்­சார கார்­க­ளின் எண்­ணிக்கை 1,725 அதி­க­ரித்து உள்­ளது.

மாறாக அதற்கு முந்­தைய 12 மாதத்­தில் இந்த அதி­க­ரிப்பு வெறும் 97 கார்­க­ளாக இருந்­தது.

முற்­றி­லும் மின்­சா­ரத்­தில் ஓடும் கார்­க­ளின் எண்­ணிக்­கை­யும் சென்ற ஆண்டு முடி­வில் 0.46 விழுக்­கா­டா­கக் கூடி­யது.

இருந்­த­லும்­கூட மொத்த வாகனங்­க­ளு­டன் ஒப்­பிட்டுப் பார்க்கை­யில் மின்­சார வாக­னங்­களின் எண்­ணிக்கை மிக­வும் குறை­வா­கத்­தான் இருக்­கிறது.

சிங்­கப்­பூர் சாலை­களில் ஏறத்­தாழ 964,000 வாக­னங்­கள் ஓடு­கின்­றன. அவற்­றில் மின்­சார வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை 0.4% கூட இல்லை.

இத­னி­டையே, 2025ஆம் ஆண்டு வாக்­கில் இத்­த­கைய வாக­னங்­க­ளுக்­கான தேவை சூடு­பி­டிக்­கும் என்று கார் விநி­யோ­கிப்­பா­ளர்­களும் வல்­லு­நர்­களும் தெரிவித்த தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

அர­சாங்­கம் பெட்­ரோல், டீசல் கார்­களை 2040ல் சாலை­க­ளை­விட்டு கட்­டம் கட்­ட­மாக அகற்­றிவிட இலக்கு நிர்­ண­யித்து இருக்­கிறது.

வரும் 2030ல் மின்சார வாக­னங்­க­ளுக்­காக 60,000 மின்­னேற்றி இடங்­களை அமைக்க அதி­கா­ரி­கள் இலக்கு நிர்­ண­யித்துள்ளனர்.

அர­சாங்­கத்­தின் ஊக்­கு­விப்­பு­கள், பல­த­ரப்­பட்ட மின் வாக­னங்­கள், அமெ­ரிக்­கா­வின் டெஸ்லா நிறு­வ­னம் வருகை ஆகி­யவை இங்கு மின்­சார வாக­னங்­கள்- குறிப்­பாக 2021 பிற்­பகு­தி­யில் அதி­க­ரித்ததற்­கான முக்­கிய கார­ணங்­கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

பெட்­ரோல், டீச­லில் ஓடும் கார்­களின் விலை­யு­டன் ஒப்­பி­டும்­போது மின் வாக­னங்­க­ளுக்­கான விலை குறைந்து இருக்­கிறது.

இது­வும் மின்­சார வாக­னங்­களில் நாட்­டம் அதி­க­ரிக்க கார­ணம் என்று கேபி­எம்ஜி நிறு­வ­னத்­தில் உலகப் பொதுப் போக்­கு­வரத்­துத் துறை இணைத் தலை­வர் திரு சத்யா ராம­மூர்த்தி கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மின்­சார வாக­னங்­களுக்கு மக்­கள் மாறிக்­கொள்ள ஆத­ரவு அளிக்க மேலும் பல கொள்கை மாற்­றங்­க­ளைச் செய்­ய­லாம் என்­று இவர் கருத்­து­ரைத்­தார்.

மின்­சார வாக­னங்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரியை அகற்­று­வது, வரு­டாந்­திர பதிவு வரியைக் குறைப்­பது, மின்­ வாக­னங்­களை இல­வ­ச­மாக நிறுத்தி வைக்க அனு­மதிப்­பது ஆகி­ய­வற்றை திரு ராம­மூர்த்தி எடுத்­துக்­காட்­டா­கக் குறிப்­பிட்­டார்.