பலதுறை தொழிற்கல்லூரி தொழில்நுட்பப் கல்விக்கழகத்தில் இந்த ஆண்டு பட்டப் படிப்பிற்குச் சேரும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான பாடக் கட்டணம் $100 கூடுகிறது.
அவர்கள் ஐந்தாண்டு தொழில்நுட்பப் படிப்பிற்குச் சேரும்போது வருடாந்திர கட்டணமாக $3,000 செலுத்த வேண்டும். இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டிலும் இந்தக் கட்டணத்தில் $100 கூடியது.
என்றாலும் இரண்டாண்டு உயர்நிலை சான்றிதழ் பயிற்சிப் படிப்பில் சேரும் சிங்கப்பூரர்களுக்கான கட்டணம் மாற்றமின்றி இருக்கும்.
புதிய கட்டணம் இந்தக் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கெனவே படிக்கும் மாணவர்களுக்கு கட்டண மாற்றம் இராது.
நிரந்தரவாசிகளுக்கான பாட கட்டணம் $200 கூடி $6,200 ஆக இருக்கும்.
அனைத்துலக மாணவர்களுக்கான கட்டணம் $400 அதிகரித்து $11,400 ஆகக் கூடும்.
நைட்டெக் பட்டயப் படிப்பில் புதிதாகச் சேரும் சிங்கப்பூரர்கள் $20 அதிகமாக $430 செலுத்த வேண்டி இருக்கும்.
நிரந்தரவாசிகளுக்கு இந்தக் கட்டணம் $300 உயர்த்தப்பட்டு $5,850 ஆக இருக்கும். அனைத்துலக மாணவர்களுக்குக் கட்டணம் $900 கூடி $16,350 ஆக உயர்த்தப்படும்.
கட்டண உயர்வு பற்றி விளக்கிய கல்வி அமைச்சின் பேச்சாளர், அரசாங்கம் பலதுறை தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக்கழக படிப்புக்குக் கணிசமாக மானியம் வழங்குவதாகக் கூறினார்.
தரமான கல்வியைக் கொடுக்க இந்தத் தொழிற்பயிற்சி நிலையங்கள் முயன்று வருகின்றன. இதனால் அவற்றுக்குச் செலவு கூடுகிறது என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

