பொது இடங்களில் உறங்கும் ஊழியர்கள், பொதுமக்கள்

பொது இடங்களில் உறங்கும் ஊழியர்கள், பொதுமக்கள்

1 mins read
563d2148-baf5-44c7-8d1c-89387a97dc78
உட்லண்ட்ஸில்தங்களின் வேலை தொடங்குவதற்கு முன் பணிகள் நடைபெறும் இடத்தில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உட்­லண்ட்ஸ் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­தில் கடந்த கிறிஸ்­து­மஸ், புத்­தாண்டு தினங்­க­ளன்று 20க்கும் அதி­க­மா­னோர் பொது இருக்­கை­களி­லும் நடை­பா­தை­யி­லும் உறங்கிக்­கொண்­டி­ருந்­தது தெரிய வந்தது. அவர்­களில் பெரும்­பாலோர் வெளிநாட்டு ஊழியர்களான ஆண்­கள். சில வேளை­களில் கன­ரக இயந்தி­ரங்­க­ளுக்கு அருகே இவர்­கள் உறங்­கு­வர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஓய்­வெ­டுப்­ப­தற்­கென உட்­லண்ட்ஸ் பெரு­வி­ரைவு ரயில் நிலை­யத்­திற்­குப் பின்­னால் கூடா­ரம் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. இம்­மா­தத்­தின் தொடக்­கத்­தில் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் இப்­ப­கு­திக்­குச் சென்று பார்த்­த­போது ஊழி­யர்­கள் மீண்­டும் கூடா­ரங்­களில் ஓய்­வெ­டுத்­த­னர்.

எனி­னும், சென்ற மாதம் பல வேளை­களில் இரவு 11 மணி­யளவில் சில ஊழி­யர்­கள் வெவ்­வேறு இடங்­களில் ஓய்வெ­டுத்­த­னர். அட்­டை­கள், பிளாஸ்­டிக் பாய்­கள் ஆகி­ய­வற்­றின் மேல் இவர்­கள் ஓய்­வெடுத்­த­னர். நிர்­வாகி வேலைக்கு முன்னதாகவே வரச்­ சொன்­ன­தால் வேறு வழி­யின்றி இவ்­வாறு செய்­ததா­க­வும் சில ஊழி­யர்­கள் கூறினர்.

ஓய்­வெ­டுக்­கக்­கூ­டாத பொது இடங்­களில் ஊழி­யர்­கள் உறங்­கு­வது தெரி­ய­ வந்­தால் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளின் மீது மனி­த­வள அமைச்சு நட­வ­டிக்கை எடுக்கும். இதன் தொடர்­பில் 2019ஆம் ஆண்­டுக்­கும் 2021ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 20க்கும் அதி­க­மான நிறு­வனங்­க­ளுக்கு மனி­த­வள அமைச்சு அப­ரா­தம் விதித்­துள்­ளது அல்­லது எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கிறது.

பொது­மக்­களில் சில­ரும் உட்­லண்ட்ஸ் ரயில் நிலை­யத்­தில் உறங்­கு­வது தெரிய வந்­தது. கொவிட்-19 கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முன்பு இருந்­த­தைக் காட்­டி­லும் தன்­னி­டம் அல்­லது தன்­னு­டன் இணைந்து செயல்­படும் அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­க­ளி­டம் ஆத­ரவு பெறும் இத்­த­கை­யோ­ரின் எண்­ணிக்கை ஐந்து மடங்­கா­கி­யுள்­ள­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு தெரிவித்­தது.