குறைபாடுகளை அடையாளம் காண விரிவான விசாரணை

குறைபாடுகளை அடையாளம் காண விரிவான விசாரணை

2 mins read
d1e8e936-2b01-4e34-96a9-7d8ff7fcd163
-

குறுஞ்­செய்தி மூலம் நிகழ்த்­தப்­பட்ட மோசடி கார­ண­மாக வங்­கிக் கணக்­கில் உள்ள பணத்தை இழந்த தனது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இம்­மா­தம் 8ஆம் தேதி­யி­லி­ருந்து நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் பணம் வழங்­கி­யி­ருப்­ப­தாக ஓசி­பிசி நேற்று தெரி­வித்­தது.

இது­வரை 30க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பணம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அது கூறி­யது.

ஒவ்­வொரு சம்­ப­வத்­தின் தனிப்­பட்ட சூழ­லைக் கருத்­தில் கொண்டு அவற்றை சரி­பார்த்து உறுதி செய்த பிறகு, பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பணம் வழங்­கப்­பட்­டது.

வழங்­கப்­பட்ட தொகை குறித்து ஓசி­பிசி வங்கி தக­வல் வெளி­யி­ட­வில்லை.

ஓசி­பிசி வங்­கி­யின் பெய­ரில் மோச­டிக்­கா­ரர்­கள் அவ்­வங்­கி­யின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பி­யி­ருந்­த­னர்.

அந்த மோசடி வலை­யில் கிட்­டத்­தட்ட 470 ஓசி­பிசி வங்கி வாடிக்­கை­யா­ளர்­கள் சிக்கி தங்­கள்

சேமிப்­பு­களை இழந்­த­னர்.

குறைந்­தது $8.5 மில்­லி­யனை மோச­டிக்­கா­ரர்­கள் பறித்­த­னர்.

ஒரு­முறை மறைச்­சொல், பரி­வர்த்­த­னை­கள் தொடர்­பான தக­வல்­களை ஓசி­பிசி அனுப்­பும் அதே குறுஞ்­செய்­தித் தளத்­தில் மோச­டிக்­கா­ரர்­கள் குறுஞ்­செய்தி அனுப்­பி­ய­தால் வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்றை நம்பி ஏமாந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த மோச­டி­யால் பலர் பாதிக்­கப்­பட்­டதை அடுத்து, கூடு­தல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக குறுஞ்­செய்தி அனுப்­பு­வோரை முன்­ப­திவு செய்ய வைக்­கும் அணு­கு­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்த கோரி தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தி­டம் இணை­யம் மூலம் மனு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

அதில் 800க்கும் அதி­க­மா­னோர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, தனது செயல்­மு­றை­யில் உள்ள குறை­பா­டு­களை அடை­யா­ளம் காண ஓசி­பிசி விரி­வான விசா­ரணை நடத்­தும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இனி அத்­த­கைய குழப்­பங்­கள், இழப்­பு­கள் ஏற்­ப­டா­தி­ருக்­கத் தேவை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை அது எடுக்­கும் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் நேற்று கூறி­யது.

மறு­ஆய்­வுக்­குப் பிறகு பொருத்­த­மான மேற்­பார்வை நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆணை­யம் முடி­வெ­டுக்­கும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"அண்­மை­யில் நடந்த குறுஞ்­செய்தி மூலம் வங்கி விவ­ரங்­

க­ளைப் பெறும் மோச­டி­யைக் கடு­மை­யான குற்­ற­மாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கரு­து­கிறது. பல வாடிக்­கை­யா­ளர்­களை அது வெகு­வா­கப் பாதித்­துள்­ளது," என்று ஆணை­யத்­தின் நாணய மேற்­பார்­வைப் பிரி­வின் துணை நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி ஹோ ஹெர்ன் ஷின் தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் நியா­ய­மான முறை­யில் நடத்­தப்­பட வேண்­டும் என்று ஆணை­யம் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

"மோச­டிக் குற்­றங்­க­ளைத் தடுக்க அனைத்து வங்­கி­களும் உயர்­தர பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என ஆணை­யம் எதிர்­பார்க்­கிறது.

"மோச­டி­யால் பாதிக்­கப்­படும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வங்­கி­கள் உட­னடி உதவி வழங்க வேண்­டும்.

"மின்­னி­லக்க வங்­கிச் சேவை தொடர்ந்து பாது­காப்­பா­ன­தாக இருப்­பதை உறுதி செய்ய வங்­கித் துறை முழு­வ­தற்­கு­மான பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் எடுப்­பது தொடர்­பாக சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கத்­து­டன் ஆணை­யம் இணைந்து செயல்­ப­டு­கிறது," என்­றார் திரு­வாட்டி ஹோ.

அண்மைய மோசடி வெளிச்சத்துக்கு வந்த பிறகு ஓசிபிசி எவ்வாறு, எத்தகைய நடவடிக்கைகள் எடுத்தது என்பது தொடர்பாக அதனுடன் ஆணையம் கலந்துரையாடி வருகிறது. இன்னும் நல்ல வாடிக்கையாளர் சேவை வழங்கியிருக்கலாம் என ஓசிபிசி ஒப்புக்கொண்டது.