சட்டவிரோதமான முறையில் முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட பெண்ணுக்குச் சிறை

சட்டவிரோதமான முறையில் முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட பெண்ணுக்குச் சிறை

2 mins read
301b4d63-53b6-4682-9b16-f468da4ceae6
-

வேலைக்கு ஆள் சேர்க்­கும் பணி­யில் இருந்த பெண் ஒரு­வர், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அடை­யாள அட்டை எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் 397 முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார்.

தமது நண்­பர்­கள், குடும்­பத்­தா­ரு­டன் அவற்­றைப் பகிர்ந்­து­கொள்­ளும் நோக்­கில் அவர் அவ்­வாறு செய்­த­தாக நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

தெமா­செக் அற­நி­று­வ­னம் இல­வச முகக்­க­வ­சங்­களை இரு­முறை விநி­யோ­கித்­த­போது 48 வயது சுவா சா மே இக்­குற்­றத்­தைப் புரிந்­தார். அவர் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் பெற்­றுக்­கொண்ட முகக்­க­வ­சங்­க­ளின் மொத்த மதிப்பு $3,176 ஆகும்.

தெமா­செக் அறநி­று­வ­னத்தை ஏமாற்­றி­ய­தாக தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை சுவா ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு ஏழு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குற்­றங்­க­ளைப் புரிந்­த­போது கிளே­ரி­யன்ட் சிங்­கப்­பூர், அக்­ரோமா சிங்­கப்­பூர் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்­காக சம்­ப­ளம், வேலை அனு­மதி அட்டை விவ­கா­ரங்­கள் தொடர்­பான பணி­யை சுவா செய்­து­கொண்­டி­ருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்­துக்­கும் செப்­டம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் அவ­ரி­டம் நம்பி ஒப்­ப­டைக்­கப்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­களின் அடை­யாள அட்டை எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய முகக்­க­வ­சங்­களை சுவா பெற்­றுக்­கொண்­டார்.

சமூக அள­வில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க அனைத்து குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளுக்கும் ­விநியோகிக்கப்பட்ட முகக்­க­வ­சங்­க­ளில் 897 முகக்­க­வ­சங்­களை அவர் முறை­யற்ற வகை­யில் எடுத்­துக்­கொண்­டார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் சிலர் சிங்­கப்­பூ­ரை­விட்­டுச் சென்­றி­ருக்­கக்­கூ­டும் அல்­லது சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முடி­யாது என்று எண்­ணிய சுவா அவர்­க­ளது அடை­யாள அட்டை எண்­க­ளைப் பயன்­ப­டுத்தி முகக்­க­வசங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­டார்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அடை­யாள அட்டை எண்­க­ளைத் தாளில் குறித்­துக்­கொண்டு இயோ சூ காங் சமூக நிலை­யத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லி­ருந்து முகக்­க­வ­சங்­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. இவ்­வாறு அவர் 397 முறை செய்­தார்.

கிளே­ரி­யன் தென்­கி­ழக்­கா­சிய நிறுவ­னத்­தைச் சேர்ந்த வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வ­ரால் தானி­யங்கி இயந்­தி­ரத்­தி­லி­ருந்து முகக்­க­வசத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல் போனதை அடுத்து, 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் அவர் காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தார்.

அவ­ருக்­காக ஒதுக்­கப்­பட்ட முகக்­க­வ­சம் ஒரு வாரத்­துக்கு முன்பே பெறப்­பட்­டு­விட்­ட­தாக தானி­யங்கி இயந்­தி­ரம் தெரி­வித்­தது.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் அடை­யாள அட்டை எண்­களை தானி­யங்கி இயந்­தி­ரத்­தில் சுவா தட்­டச்சு செய்து முகக்­க­வ­சங்­

க­ளைப் பெற்­றுக்­கொண்­டது கண்­கா­ணிப்பு கேமரா பதிவு மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­போது மொத்­தம் 454 முகக்­க­வ­சங்­களை அவர் ஒப்­ப­டைத்­தார்.

அவற்றை அவர் தமது வீட்­டில் வைத்­தி­ருந்­தார்.

ஆனால் சுகா­தார அடிப்­ப­டை­யில் அந்த முகக்­க­வ­சங்­களை தெமா­செக் அற­நி­று­வ­னம் ஏற்க மறுத்­து­விட்­டது.