அதிக தொடக்கப் பள்ளி மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம்

அதிக தொடக்கப் பள்ளி மாணவர்கள் தடுப்பூசிக்கு விண்ணப்பம்

1 mins read
7ea225d3-eebf-4b5b-befe-86faf3eb3347
-

தொடக்­கப் பள்ளி மாண­வர்­களில் மூன்­றில் இரண்டு பங்­கி­னர் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­கொள்ள விண்­ணப்­பித்­திருப்­ப­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­துள்­ளார்.

12 வய­துக்­குக் கீழ் உள்ள சிறு­வர்­கள் மூன்று நாள்­க­ளுக்கு முன் இரண்­டாம் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளத் தொடங்­கி­ய­தாகவும் ஃபேஸ்புக் பதி­வில் திரு சான் கூறி­னார்.

ஐந்­தி­லி­ருந்து 11 வய­துக்கு உட்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு சென்ற மாதம் 27ஆம் தேதி­யிலி­ருந்து தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது. வய­தில் மூத்த சிறு­வர்­க­ளுக்கு முத­லில் தடுப்­பூசி போடப்­பட்­டது.

கடந்த சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி 100,000க்கும் அதி­க­மான சிறு­வர்­க­ளுக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர், போட்­டுக்­கொள்­ளா­தோர் ஆகிய இரு தரப்­பி­ன­ருக்­கும் மாறு­பட்ட கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் உள்­ளன.

அத்­த­கைய கட்­டுப்­பா­டு­களை 12 வய­துக்­குக் கீழ் உள்ள சிறு­வர்­க­ளுக்கு நடை­மு­றைப்­ப­டுத்த திட்­டம் இல்லை என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"மோச­மாக நோய்­வாய்ப்­படும் சாத்­தி­யம் சிறு­வர்­க­ளுக்­குக் குறைவு, முடிந்­த­வரை சிறு­வர்­க­ளுக்கு முழு­மை­யான கல்வி கிடைப்­ப­தைப் பாது­காக்க நாங்­கள் எண்­ணம் கொண்­டுள்­ளோம்," என்று திரு ஓங் குறிப்­பிட்­டி­ருந்­தார்.