தகாத பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மனநோய் இருந்ததாகத் தகவல்

தகாத பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மனநோய் இருந்ததாகத் தகவல்

2 mins read
17850eb5-d32a-446c-a842-f74bdaa8d092
-

சிங்­கப்­பூ­ரின் புகழ்­பெற்ற பள்­ளி­களில் ஒன்­றின் ஆசி­ரி­யர், குறைந்த வயது மாண­வி­யு­டன் தகாத உறவு வைத்­துக்­கொண்­ட­து­டன் தகாத பாலி­யல் செயல்­க­ளி­லும் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படும் நிலை­யில், அந்த ஆசி­ரி­ய­ருக்கு 'இரு­ம­னக் குழப்­பம்' (bipolar disorder) என்ற மன­நோய் இருந்­துள்­ள­தாக நீதி­மன்­றத்­தில் நேற்று தெரி­விக்­கப்­பட்­டது.

கட்­டாய சிகிச்சை ஆணைக்கு அந்த ஆட­வர் தகு­தி­பெ­று­வது குறித்து மதிப்­பி­டும் அறிக்கை வேண்­டும் என நீதி­பதி கோரி­யுள்­ளார்.

ஆட­வ­ருக்கு இருந்த மன­நோய்க்­கும் அவர் புரிந்த பாலி­யல் குற்­றச்­செ­யல்­க­ளுக்­கும் தொடர்பு உள்­ளதா என்­பது இந்த மதிப்­பீட்டு அறிக்கை வழி கண்­ட­றி­யப்­படும்.

குற்­றச்­செ­யல்­கள் 2011ல் நடந்­த­தா­க­வும் அப்­போது ஆட­வ­ருக்கு 36 வயது, மாண­விக்கு 15 வயது என்­றும் கூறப்­பட்­டது. தற்­போது 47 வய­து­டைய அந்த ஆட­வர், சிறு­வர் மற்­றும் இள வய­தி­னர் சட்­டத்­தின் கீழ் தன் மீது கூறப்­பட்ட இரு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

2018ஆம் ஆண்­டு­வாக்­கில் அந்த ஆட­வர் ஆசி­ரி­யர் பணி­யில் இல்லை என்று கல்வி அமைச்சு 2020ல் தெரி­வித்­தது.

ஏப்­ரல் மாதத்­தில் ஆட­வ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பயிற்சி ஆசி­ரி­ய­ருக்­குச் சிறை

மற்­றொரு சம்­ப­வத்­தில் குறைந்த வயது மாண­வி­யு­டன் தகாத பாலி­யல் செயல்­களில் ஈடு­பட்ட முன்­னாள் பயிற்சி ஆசி­ரி­யர் ஒரு­வ­ருக்கு நேற்று 16 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மாண­வி­யின் பெற்­றோ­ருக்­குத் தெரி­யா­மல் தன் வீட்­டில் வாரத்­தில் நான்கு இர­வு­களில் அந்த ஆட­வர் மாண­வி­யைத் தங்க வைத்­தி­ருக்­கி­றார். குறைந்­தது பத்து முறை­யா­வது இரு­வ­ரும் பாலி­யல் செய­லில் ஈடு­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது. ஆசி­ரி­யர் ஆகும் தகு­தியை அந்த 27 வயது ஆட­வர் இழந்­து­விட்­ட­தாக கூறப்­பட்­டது.