'யூடியூப்' பார்த்து வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் ஆள்மாறாட்டம்

'யூடியூப்' பார்த்து வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டதுடன் ஆள்மாறாட்டம்

2 mins read
2ad00abb-46dd-4c8f-b23a-5c304133c387
-

வெறும் 17 வயதே ஆன ஒரு சிறு­வன், 'யூடி­யூப்' காணொ­ளி­க­ளைப் பார்த்து வாக­னம் ஓட்­டக் கற்­றுக்­கொண்­ட­து­டன் தன் தந்­தை­யின் விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வாக­னங்­களை வாட­கைக்­கும் பெற்­றிருந்­தார்.

வாக­னம் ஓட்­டு­வ­தற்கு அனு­மதிக்­கப்­படும் வயதை எட்­டாத நிலை­யில் கார் ஓட்­டி­யது, தந்­தை­யின் விவ­ரங்­க­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்தி ஆள்­மா­றாட்­டம் செய்­தது ஆகிய இரு குற்­றச்­சாட்­டு­களை­யும் தற்­போது 19 வய­தா­கும் அந்­தச் சிறு­வன் நேற்று முன்­தி­னம் ஒப்­புக்­கொண்­டார்.

அந்­தச் சிறு­வன் எட்டு முறை இவ்­வாறு வாட­கைக்கு வாக­னத்­தைப் பெற்­ற­தா­க­வும் இரண்டு பயணி­களை ஏற்­றிச் சென்ற சம­யம், காவ­லர்­க­ளி­டம் சிக்­கி­ய­தா­க­வும் கூறப்­பட்­டது. சிறு­வர் மற்­றும் இள வய­தி­னர் சட்­டத்­தின் கீழ் குற்­றம் புரிந்­த­போது சிறு­வ­னுக்கு 17 வயது என்­ப­தால் அவ­ரின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

'ட்ரைப்­கார்' எனும் உள்­ளூர் கார் வாடகை நிறு­வ­னத்­திற்­குத் தன் தந்­தை­யின் விவ­ரங்­களை சிறு­வன் சமர்ப்­பித்து கணக்கு ஒன்­றைத் திறக்க முயன்­றார்.

விண்­ணப்­பம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டதை அடுத்து இணை­யத்­த­ளம் வழி­யாக 2020ஆம் ஆண்­டில் செப்­டம்­பர் 24ஆம் தேதிக்­கும் அக்­டோ­பர் 7ஆம் தேதிக்­கும் இடையே அந்­தச் சிறு­வன் காரை வாக­னத்­திற்­குப் பெற்­றுக்­கொண்­டார்.

இளை­ஞன், 56 வய­து­டைய தன் தந்­தைக்­குத் தெரி­யா­மல் இவ்­வாறு செய்­தி­ருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

சிறு­வ­னுக்கு 17 வயது என்­றும் அவ­ரி­டம் ஓட்­டு­நர் உரி­மம் இல்லை என்­றும் அறி­யாத இரண்டு பயணி­கள், அக்­டோ­பர் 7ஆம் தேதி­யன்று சிறு­வ­னின் வாடகை காரில் பய­ணம் செய்­த­னர்.

பின்­னி­ரவு மூன்று மணி­ய­ள­வில் காவல் அதி­கா­ரி­க­ளால் போடப்­பட்­டி­ருந்த சாலைத் தடுப்­பில் சிறு­வன் ஓட்­டிச் சென்ற கார் நிறுத்­தப்­பட்­டது.

ஓட்­டு­நர் உரி­மத்­தைக் காட்­டு­மாறு சிறு­வ­னின் அதி­கா­ரி­கள் கேட்­டதை அடுத்து, தன்­னி­டம் உரி­மம் இல்லை என்­றும் தனக்கு 17 வயது என்­றும் சிறு­வன் ஒப்­புக்­கொண்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு உத்­த­ர­வுக்­குச் சிறு­வன் தகு­தி­பெ­று­வது குறித்து அறிக்கை கோரி­யுள்­ளார் நீதி­பதி.

வழக்­குக்­கான தண்­டனை விதிப்பு மார்ச் மாதத்­திற்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.