நாடாளுமன்றத்தில் தகுந்த ஆதாரத்துடன் உரையாற்ற வேண்டும்: மன்ற நாயகர்

நாடாளுமன்றத்தில் தகுந்த ஆதாரத்துடன் உரையாற்ற வேண்டும்: மன்ற நாயகர்

1 mins read
a291a798-d38e-4405-86be-3a8c2bc7c079
-

நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­றும் உறுப்­பி­னர்­கள் தங்­க­ளது கூற்­றுக்கு ஆதா­ரங்­களை வைத்­தி­ருப்­பார்­கள் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தா­க­வும் ஆதா­ரத்­து­டன் எத­னை­யும் எடுத்­து­ரைக்க உறுப்­பி­னர்­கள் தயங்­கக்­கூ­டாது என்­றும் மன்ற நாய­கர் டான் சுவான்-ஜின் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அவர் தமது ஃபேஸ்புக்­கில் தெரி­விக்­கை­யில், ஒவ்­வோர் உறுப்­பி­ன­ரும் தங்­க­ளது விருப்­பப்­படி பேச, விவா­திக்க, கேள்வி எழுப்­பத் தொடங்­கி­னால் அது பொருத்­த­மற்­ற­தாக அமை­

வ­தோடு மன்­றத்­தில் அத­னால் குழப்­பம் ஏற்­படும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

எந்த ஓர் உறுப்­பி­ன­ருக்­கும் பேச தாம் அனு­மதி தரா­விட்­டால் அதற்­கான ஒதுக்­கீடு அவ­ருக்கு இல்லை என்றோ விதிக்கு முர­ணாக அவர் நடந்­து­கொள்­கி­றார் என்றோ பொருள்­படும் என்று திரு டான் கூறியுள்­ளார்.

அப்­ப­டிப்­பட்ட நேரங்­களில் மன்­றத்­தின் ஒழுங்­கை­யும் கண்­ணி­யத்­தை­யும் கட்­டிக்­காக்­கும் பொறுப்பு தம்மைச் சார்ந்ததாக இருக்­கும் என்­றார் அவர்.

"நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மன்­றத்­தில் எவ்­வாறு நடந்­து­கொள்ள வேண்­டும் என்­பதை மன்ற நாய­க­ரும் அதற்­கென உள்ள விதி­களும் தீர்­மா­னிக்­கின்­றன.

"மன்ற நாய­க­ரால் அழைக்­கப்

­ப­டா­த­போது உறுப்­பி­னர்­கள் உரை­யாற்­றக்­கூ­டாது என்­ப­தும் விதி­யில் உள்­ளது.

"அதை மீறி பேசும் உறுப்­பி­னர்­க­ளைத் தடுத்து நிறுத்­தும் உத்­த­ரவை மன்ற நாய­க­ரால் பிறப்­பிக்க முடி­யும்.

"மன்­றத்­தில் உறுப்­பி­னர்­கள் பொது­வா­கப் பேச­வேண்­டுமே தவிர 'உங்­கள் பேச்சு', 'நீங்­கள் சொன்­னீர்­கள்' என்று மற்­றோர் உறுப்­பி­ன­ரி­டம் நேர­டி­யாகப் பேசக்­கூ­டாது.

"மேலும், ஆதா­ர­மற்ற, பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை மன்­றத்­தில் உறுப்­பி­னர்­கள் எழுப்­பக்­

கூ­டாது," என்று திரு டான் தெரி­வித்­துள்­ளார்.