தொற்று சற்று கூடினாலும் புதிய மரணம் பதிவாகவில்லை

தொற்று சற்று கூடினாலும் புதிய மரணம் பதிவாகவில்லை

2 mins read
61553608-acb5-4bc0-819d-9b605938a05a
-

சிங்­கப்­பூ­ரில் செவ்­வாய்க்­கி­ழமை புதி­தாக 1,448 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இவர்­களில் 990 பேர் உள்­ளூர்­வா­சி­கள், 458 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

அன்­றைய தினம் கொவிட்-19 தொற்று கார­ண­மாக யாரும் மர­ண­ ம­டை­ய­வில்லை என சுகா­தார அமைச்­சின் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

எனவே மரண எண்­ணிக்கை 843 ஆகத் தொட­ரு­கிறது. திங்­கட்­கி­ழமை 1,165 பேருக்கு தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

டிசம்­பர் 2ஆம் தேதி தொடங்கி அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை 1,000க்குக் குறை­யா­மல் நீடிக்­கிறது.

ெசவ்­வாய்க்­கி­ழமை தொற்று எண்­ணிக்கை அதி­க­ரித்த அதே நேரம் வாராந்­திர கிரு­மிப் பர­வல் விகி­த­மும் சற்று கூடி­யது. திங்­கட்­கி­ழமை 1.60 ஆக இருந்த அந்த விகி­தம் நேற்று முன்­தி­னம் 1.76 ஆக அதி­க­ரித்­தது.

இது 1க்கு மேல் இருந்­தால் சமூக அள­வில் கிரு­மிப் பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தா­கப் பொருள்.

மொத்த கொவிட்-19 தொற்று நில­வ­ரம் இவ்­வா­றி­ருக்க, ஓமிக்­ரான் தொற்று செவ்­வாய்க்­கி­ழமை 589 பேருக்கு உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­களில் 85 பேர் வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள்; 504 பேர் உள்­ளூர்­வா­சி­கள்.

திங்­கட்­கி­ழமை 609 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

அன்­றைய தினம் நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் தொற்­றுப் பர­வல் தொடங்­கி­யது முதல் 294,462 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். 247 பேர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இவர்­களில் 16 பேருக்கு செயற்கை உயிர் வாயு தேவைப்­ப­டு­கிறது. இதர 13 நோயா­ளி­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்­ள­னர்.

இதற்­கி­டையே, தடுப்­பூசி நில­

வ­ரம் குறித்த தக­வல்­க­ளை­யும் அமைச்சு வெளி­யிட்­டுள்­ளது.

திங்­கட்­கி­ழமை நில­வ­ரப்­படி, தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் மக்­கள்­தொ­கை­யில் 91 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

இந்த எண்­ணிக்­கை­யில் 5 வயது முதல் 11 வயது வரை­யி­லான சிறு­வர்­களும் டிசம்­பர் 27ஆம் தேதி முதல் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­ற­னர். அன்­றைய தினம்­தான் சிறு­வர்­

க­ளுக்கு தடுப்­பூசி போடும் நட­

வ­டிக்கை தொடங்­கி­யது.

மொத்த மக்­கள்­தொ­கை­யில் சுமார் 53 விழுக்­காட்­டி­னர் பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்கொண்­டுள்­ள­னர்.