தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரர்கள் சாதனை அளவு நன்கொடை

2 mins read
6d5ffc68-2413-43f3-a1f9-7182188f71f5
குழந்தைகள், இளையர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டவர் களுக்கு உதவ 600க்கும் ேமற்பட்ட அறப்பணி அமைப்புகளுக்கு கிவிங்.எஸ்ஜி ஆதரவு அளித்து வருகிறது.படம்: என்விபிசி -

பெருந்­தொற்­றுக் காலத்­தில் வேலை, நிதி உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளு­டைய தாராள மனதை இழந்­து­வி­ட­வில்லை.

கடந்த ஆண்டு இணை­யம் வழி­யாக திரட்­டப்­பட்ட அறப்­பணி நிதிக்கு அவர்­கள் சாதனை அளவு நன்­கொடை அளித்­துள்­ள­னர்.

கிவிங்.எஸ்ஜி (Giving.sg) எனும் நிதித் திரட்டு இணை­யத் தளம் ஏறக்­கு­றைய 95.5 மில்­லி­யன் வெள்­ளியை நன்­கொ­டை­யாக பெற்­றுள்­ளது. இது­தான், அந்த இணை­யத் தளம் தொடங்­கப்­பட்ட பிறகு திரட்­டிய ஆக அதிக அறப்­பணி நிதி­யா­கும். கடந்த 2010ல் தேசிய தொண்­டூ­ழி­யம், கொடை அமைப்பு (என்­வி­பிசி) அந்த இணை­யத் தளத்தை ெதாடங்­கி­யி­ருந்­தது.

2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் கடந்த ஆண்டு திரட்­டப்­பட்ட 95.5 மில்­லி­யன் வெள்ளி இரண்டு விழுக்­காடு அதி­க­மா­கும். கிரு­மித்­தொற்­றுக்கு முன்பு, 2019ஆம் ஆண்­டில் திரட்­டப்­பட்ட 35.8 மில்­லி­யன் வெள்­ளி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் அது இரண்டு மடங்­கா­கும்.

சுமார் 625 அறப்­பணி அமைப்­பு­கள் கிவிங்.எஸ்ஜி இணை­யத்­ தளம் மூலம் நிதி திரட்­டு­கின்­றன. அது மட்­டு­மல்­லா­மல் தேசிய அள­வில் நிதி திரட்­டும் முன்­னணி மின்­னி­லக்­கத் தள­மா­க­வும் அது விளங்கி வரு­கிறது.

கிரு­மித்­தொற்று கார­ண­மாக மெய்­நி­கர் வழி­யாக நன்­கொ­டை­ய­ளிப்­பது அதி­க­ரித்­த­தால் கடந்த ஆண்டு சாதனை அள­வாக நிதி கிடைத்­தது என்று என்­வி­பிசி நேற்று அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

டிசம்­பர் 31ஆம் தேதி­யன்று ஒரு நாள் மட்­டும் 3.5 மில்­லி­யன் வெள்ளி அள­வுக்கு அதன் மூலம் நிதி திரட்­டப்­பட்­டது.

இது­வும், இது­வரை இல்­லாத ஒருநாள் சாத­னை­யா­கும்.

சிங்­கப்­பூ­ரில் இதர சில நன் ெகாடை திரட்­டும் மின்­னி­லக்­கத் தளங்­களும் இயங்கி வரு­கின்­றன.

அவற்­றில் ஒன்­றான ரே ஆஃப் ஹோப் கடந்த ஆண்டு 4.4 மில்­லி­யன் வெள்­ளி­யைத் திரட்­டி­யது.

இது, 2020ல் அது திரட்­டிய தொகைக்கு ஈடா­னது.

ஆனால் 2019ஆம் ஆண்­டில் திரட்­டப்­பட்ட 408,000 வெள்­ளி­ யுடன் ஒப்­பிட்­டால் தற்­போது திரட்­டிய தொகை பத்து மடங்கு அதி­கம். அரிய நரம்­புத் தசை நோயால் பாதிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் குழந்­தைக்கு உல­கின் விலை­யு­யர்ந்த மருந்தை வாங்­கு­வ­தற்­காக கடந்த ஆண்டு ரே ஆஃப் ஹோப் மூலம் பொது­மக்­கள் 3 மில்­லி­யன் வரை நன்­கொடையளித்­துள்­ள­னர்.