தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசிபிசி: அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மோசடியில் இழந்த பணம் திருப்பி அளிக்கப்படும்

2 mins read
c415ebfd-d829-4c71-8e38-301db8a2790e
தெம்பனிசில் உள்ள ஓசிபிசி வங்கிக் கிளையின் முன்பு உள்ள ஏடிஎம் இயந்திரங்கள். பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் வங்கியே பணத்தை திருப்பி வழங்கும் என்று ஓசிபிசி வங்கி தெரிவித்துள்ளது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அண்­மைய குறுந்­த­க­வல் மோச­டி­யில் சிக்­கிய அனைத்து ஓசி­பிசி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் நல்­லெண்­ணத்­தின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் இழந்த பணத்ைத வங்­கி திருப்­பி­ய­ளிக்­கும் என்று ஓசி­பிசி வங்கி நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

ஏற்­கெ­னவே 100க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இழந்த பணம் திருப்பித் தரப்­பட்­டுள்­ளது.

எஞ்­சிய வாடிக்­கை­யா­ளர் களுக்கு அடுத்த வாரத்­திற்­குள் பணத்தை வழங்க ஏற்­பா­டு செய்து வரு­வதாக ஓசி­பிசி வங்கி தெரி­வித்­தது.

"இவ்­வி­வ­கா­ரத்­தில் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் ஒத்­து­ழைப்பு அவ­சி­யம். ஒவ்­வொரு சம்­ப­வத்­தை­யும் சரி­பார்க்க அவ­கா­சம் தேவைப் படு­கிறது. ஒவ்­வொரு விவ­கா­ரத் தையும் நியா­ய­மாக, சரி­யாக நடத்து வதற்கு இந்த நடை­முறை முக்­கி­யம்," என்று அறிக்­கை­யில் ஓசி­பிசி குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி ஹெலன் வோங் வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­காக அதிக நேரம் எடுத்துக்­கொண்­ட­தற்கு அவர் மன்னிப்­பும் கேட்­டுக் கொண்­டார்.

போலி­யான இணை­யத் தளங் களின் மோச­டிக்கு ஆளாக நேரி­டும் என்­பதை அறி­யாத வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் தொடர்பு கொண்டு வரு­கி­றோம். இத­னால் 200க்கும் மேற்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் மோச­டி­யி­லி­ருந்து தப்­பி­யுள்­ள­னர் என்­றார் அவர்.

ஏறக்­கு­றைய 470 ஓசி­பிசி வாடிக்­கை­யா­ளர்­கள் கடந்த டிசம்­ப­ரில் நடந்த மோச­டி­யில் குறைந்­தது 8.5 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­துள்­ள­னர். சிலர் தங்­க­ளு­டைய குடும்­பத்­துக்­காக பல ஆண்­டு­கள் உழைத்துச் சேமித்த பணத்தை இழந்­து­விட்­ட­னர். ெபரும்­பா­லான ஏமாற்­றுச் சம்­ப­வங்­களில் ஓசி­பிசி வங்­கி­யைப் போன்ற போலி­யான இணை­யத் தளத்­துக்கு இட்­டுச்­செல்­லும் இணையத் தொடர்பு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு குறுந்­த­க­வல் மூலம் அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறது. வங்­கிக் கணக்­கில் நுழை­யும்­படி கூறப்­ ப­டு­வ­தால் சில வாடிக்­கை­யா­ளர்­கள் அந்­தப் போலி இணை­யத் தளத்­திற்­குச் சென்று மறைச்­சொல் உள்­ளிட்ட தக­வல்­க­ளு­டன் தங்­க­ளு­டைய வங்­கிக் கணக்­கில் நுழைய முயற்சி செய்­கின்­ற­னர்.

ஆனால் ஏமாற்­றுப் பேர்­வ­ழி­கள் அந்த விவ­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பணத்தை எடுத்­து­வி­டு­கின்­ற­னர்.

ஓசி­பிசி என்ற பெய­ரில் குறுந்­த­க­வல் அனுப்­பப்­ப­டு­வ­தால் வாடிக்­கை­யா­ளர்­கள் எளி­தில் ஏமாந்­து­வி­டுவ தாக­வும் கூறப்­ப­டு­கிறது.