கிருமிப் பரவலுக்கு இைடயே பொது இடங்களில் மூன்று முறை முகக்கவசம் அணியாமல் இருந்த பிரிட்டிஷ்காரர் மீது நேற்று கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான பிலிப் ரிச்சர்ட் மோக்ரிட்ஜ், 2020 நவம்பருக்கும் கடந்த ஆண்டின் மே மாதத்துக்கும் இடையே அந்தக் குற்றச்செயல்களை புரிந்தார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக் கப்பட்டது.
2020 நவம்பர் 26ஆம் தேதி செங்காங் எம்ஆர்டி நிலையத்தில் 54 வயதான மோக்ரிட்ஜ் முகக்கவசம் அணியாதது முதல் குற்றச்செயலாகும்.
அதே ஆண்டில் டிசம்பர் 19ஆம் ேததி இரவு 11.00 மணியளவில் சிராங்கூன் எம்ஆர்டி நிலையத்திலும் அவர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 16ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் கிச்சனர் ரோட்டில் உள்ள சிட்டி ஸ்குவேர் மாலில் அவர் மீண்டும் முகக்கவசம் அணியாமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. நேற்று நீதிமன்ற விசாரணைக்கு அவர் முகக்கவசம் அணிந்து காணப்பட்டார்.
பின்னர் பேசிய மோக்ரிட்ஜ் குற்றத்தை ஒப்புக்கொள்ள விரும்புவதாகவும் வழக்கறிஞர் யாரையும் அமர்த்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார். அவரை 15,000 வெள்ளி பிணைத் தொகையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 3ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முதல்முறை புரியும் ஒவ்வொரு குற்றச்செயலுக்கும் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையும் 10,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படலாம். இதே குற்றத்தை மீண்டும் புரிவோருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் 20,000 வெள்ளி வரை அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

