கடந்த 2020ல் கொள்ளைநோய் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் முகக்கவசத்துக்குத் தட்டுப்பாடு இருந்தது. இதனால் பொதுமக்களில் சிலர் அச்சமடைந்தனர். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முஹமது சுல்ஹில்மி ஆரிஃப் என்பவர் முகக்கவசங்களை விற்பதாகக் கூறி ஏமாற்றியிருக்கிறார்.
முகக்கவசத்துக்காக அல்லாடியவர்களிடம் மொத்தம் $2,302.50 வரை பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த 23 வயது வாலிபர் அவர் களுக்கு முகக்கவசங்களை வழங்கவில்ைல.
சிங்கப்பூரரான முஹமது சுல்ஹில்மி ஆரிஃப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டு களையும் நேற்று ஒப்புக் கொண்டார். அவருக்கு 14 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மூவரிடம் அவர் $1,515 வரை ஏமாற்றினார். மேலும் முறைகேடாக $1,700 ஆதாயம் பெற்ற குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவர் மீதான இதர நான்கு குற்றச் செயல்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் $22.50 முதல் $750 வரை கொடுத்திருந்தனர்.
கேரோசல் இணையத் தளத்தில் 'சேவியர்டான்556' என்ற பெயரில் ஸுல்ஹில்மி தனக்கென ஒரு கணக்கு ஒன்றை நடத்தி வந்ததாக நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞரான பெஞ்சமின் சாமிநாதன் தெரிவித்தார்.
அந்தத் தளத்தில் 2020 பிப்ரவரி 21ஆம் தேதி அன்று ஐம்பது முகக்கவசங்கள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை 15 வெள்ளி என்று ஸுல்ஹில்மி குறிப்பிட்டு இருந்தார்.
அதே நாளில் ஸுல்ஹில்மியை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகொண்ட 41 வயது நபர் ஆடவர் ஒருவர், 300 பெட்டி முகக்கவசங்களை வாங்க 3,750 வெள்ளி கொடுத்தார். ஆனால் பலமுறை கேட்டும் ஸுல்ஹில்மி அவருக்கு முகக்கவசங்களை வழங்கவில்லை.
"தன்னிடம் 300 பெட்டி முகக்கவசங்கள் இல்லாமல் அதனை வழங்கும் எண்ணமும் இல்லாமல் பாதிக்கப்பட்டவரை குற்றச்செயல் புரிந்தவர் ஏமாற்றியிருக்கிறார்," என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மேலும் தெரிவித்தார்.

