ஜூரோங் வெஸ்ட் அடுக்குமாடி வீட்டில் மின் சைக்கிள் தீப்பிடித்ததில் ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
சைக்கிளுக்கு மின்னூட்டும் போது, தீ பிடித்திருக்கக்கூடும் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று காலை சுமார் ஆறு மணியளவில் தகவல் கிடைத்தது. புளோக் 723, ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5ல் உள்ள ஒரு மூன்றாவது மாடி வீட்டில் தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன்பே, வீட்டில் இருந்த ஆறு பேர் வெளியேறிவிட்டதாகக் கூறப்பட்டது. அவர்களோடு, அக்கம்பக்கத்தாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சம்பவம் நடந்த வீட்டில் இருந்த ஐவர், புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்டனர் என்றும் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவேற்பு அறையில் பல பொருட்கள் கருகிய காட்கிளைக் குடிமை தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது. தனிநபர் நடமாட்ட சாதனங்களை நீண்ட நேரத்துக்கு மின்னனூாட்ட வேண்டாம் என குடிமை தற்காப்புப் படை பொதுமக்களைக் கேட்டுகொண்டது.

