அனைத்துலகப் பள்ளியில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் ஆசிரியர், டாக்சி ஓட்டுநரை நான்கு முறை தள்ளிவிட்டு இரண்டு முறை உதைத்திருக்கிறார். தாம்சன் பிளாசா கடைத்தொகுதியின் டாக்சி நிறுத்தத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
குற்றவாளியான 51 வயது ஷேன் மேத்தியூ ராஸுக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று டாக்சி ஓட்டுநரான திரு குய் எங் சியூவிற்குக் காயம் ஏற்படுத்தியதாக ராஸ் மீது சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக திரு குய்க்கு 441 வெள்ளியைக் கொடுக்குமாறும் ஆஸ்திரேலிய அனைத்துலகப் பள்ளியில் வேலை செய்யும் ராஸுக்கு உத்தரவிடப்பட்டது.
ராஸ், நீட்டிக்கப்பட்ட கட்டாய விடுப்பில் இருந்து வந்துள்ளதாக ஆஸ்திரேலய அனைத்துலகப் பள்ளி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தது. தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராஸின் வேலை குறித்து அவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளப்போவதாகவும் அது கூறியது.
ஆஸ்திரேலிய அனைத்துலகப் பள்ளியின் விதிமுறைகளின்படி, நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.