ஓட்டுநரைத் தாக்கிய ஆசிரியருக்குச் சிறை

1 mins read
683ced30-0ade-427c-990c-021bb410bc53
-

அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஓர் ஆசி­ரியர், டாக்சி ஓட்­டு­நரை நான்கு முறை தள்­ளி­விட்டு இரண்டு முறை உதைத்­தி­ருக்­கி­றார். தாம்சன் பிளாசா கடைத்­தொ­கு­தியின் டாக்சி நிறுத்­தத்­தில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது.

குற்­ற­வா­ளி­யான 51 வயது ஷேன் மேத்­தியூ ராஸுக்கு ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 14ஆம் தேதி­யன்று டாக்சி ஓட்­டு­ந­ரான திரு குய் எங் சியூ­விற்­குக் காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக ராஸ் மீது சுமத்­தப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டது. இழப்­பீட்­டுத் தொகை­யாக திரு குய்க்கு 441 வெள்­ளி­யைக் கொடுக்­கு­மா­றும் ஆஸ்­தி­ரே­லிய அனைத்­து­ல­கப் பள்­ளி­யில் வேலை செய்­யும் ராஸுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ராஸ், நீட்­டிக்­கப்­பட்ட கட்­டாய விடுப்­பில் இருந்து வந்­துள்­ள­தாக ஆஸ்­தி­ரே­லய அனைத்­து­ல­கப் பள்ளி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் தெரி­வித்­தது. தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ராஸின் வேலை குறித்து அவ­ரு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­கொள்­ளப்­போ­வ­தா­க­வும் அது கூறி­யது.

ஆஸ்­தி­ரே­லிய அனைத்­து­ல­கப் பள்­ளி­யின் விதி­மு­றை­க­ளின்­படி, நீதி­மன்­றத்­தில் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள ஆசி­ரி­யர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­ப­ட­லாம் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.