‘விடிஎல்’ பயணச்சீட்டு விற்பனை: 50% வரம்பில் மாற்றமில்லை

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகளில் (விடிஎல்) பயணம் செய்வதற்கான பயணச்சீட்டு விற்பனையில் விதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காடு வரம்பில் மாற்றம் எதுவுமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) முதல் இந்த வரம்பு நடப்புக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஓமிக்ரான் பரவல் காரணமாக, கடந்த டிசம்பர் 23ஆம் தேதிமுதல் நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 20) வரை ‘விடிஎல்’ விமான, பேருந்து பயணச்சீட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

எனினும், ஏற்கெனவே பயணச்சீட்டுகளை வாங்கிவிட்டோர் ‘விடிஎல்’ பயண ஏற்பாட்டின்கீழ் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஓமிக்ரான் திரிபு பற்றி அதிகாரிகள் மேலும் தெரிந்துகொள்ள இந்த எல்லைக் கட்டுப்பாடு காலஅவகாசம் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், உள்ளூர், உலகளாவிய கொவிட்-19 நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து அதற்கேற்றவாறு நடைமுறைகளை தான் மாற்றியமைக்க இருப்பதாக அமைச்சு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!