கொவிட்-19 கிருமிப் பரவல் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் கடந்த நான்கு வாரங்களாகச் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை நேற்றுடன் முடிவடைந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை சிங்கப்பூருக்கு வர தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணத் தடத் திட்டத்தின்கீழ் (விடிஎல்) விமான, பேருந்துப் பயணச் சீட்டுகளின் விற்பனையை அரசாங்கம் நிறுத்தியது.
கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை விடிஎல் திட்டத்தின்கீழ் பயணச் சீட்டு விற்பனையை சிங்கப்பூர் தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நேற்று முதல்
என்னென்ன மாற்றங்கள்
கொண்டுவரப்படுகின்றன?
இதுதொடர்பாக எந்த மாற்றமும் இல்லை. புதிய விதிமுறைகள் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த நான்கு வாரங்களில் விடிஎல் விமானப் பயணச் சீட்டுகளை விற்க விமானச் சேவை
களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் சிங்கப்பூருக்குள் வரும் விடிஎல் விமானப் பயணச் சீட்டுகளை நேற்று முதல் மட்டுமே விற்க முடியும். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான நிலம் வழி பயணத் தடத் திட்டத்தின்கீழ் பயணச் சீட்டுகளை விற்க பேருந்துச் சேவை நிறுவனங்களான காஸ்வே லிங்க், டிரான்ஸ்டார் டிராவல் ஆகியவற்றுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாடு கடந்த டிசம்பர் மாதம் 23ஆம் தேதியிலிருந்து நடப்பில் இருந்து வருகிறது. கடந்த மாதம் 23ஆம் தேதியிலிருந்து முன்பைவிட குறைந்த அளவிலான விடிஎல் பயணச் சீட்டுகளை விமானச் சேவைகளும் பேருந்து நிறுவனங்களும் விற்பனை செய்து வருகின்றன.
விடிஎல் பயணத்தின்கீழ் ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வர அதிகபட்சம் 5,000 பயணிகளுக்கு விமானப் பயணச் சீட்டுகள் விற்கப்படலாம். இதற்கு முன்பு அதிகபட்சம் 10,000 பயணச் சீட்டுகளை விற்க அனுமதி வழங்கப்பட்டது.
எந்தெந்த நாடுகளுடன் சிங்கப்பூர் விடிஎல் ஒப்பந்தம் செய்துள்ளது?
விடிஎல் பயணத் திட்டத்தின்கீழ் விமானம் மூலம் ஆஸ்திரேலியா, புருணை, கம்போடியா, கனடா, டென்மார்க், ஃபிஜி, ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனீசியா, இத்தாலி, மலேசியா, மாலத் தீவுகள், நெதர்லாந்து, தென்கொரியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 24 நாடுகளிலிருந்து பயணிகள் சிங்கப்பூருக்கு வரலாம்.
விடிஎல் நிலம் வழிப் பயணம் தொடர்பாக மலேசியாவுடன்
சிங்கப்பூர் தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விடிஎல் திட்டத்தின்கீழ் பயணம் செய்வோர் எத்தகைய பரிசோதனைகளைச் செய்துகொள்ள
வேண்டும்?
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை தலைதூக்குவதற்கு முன்பு, விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு விமானம் மூலம் வந்த பயணிகள் பயணத்துக்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருந்தது. சிங்கப்பூர் வந்தடைந்தததும் அவர்களுக்கு மீண்டும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு நிலம் வழி வந்த பயணிகள் பயணத்துக்கு முன்பு பிசிஆர் அல்லது ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அவர்கள் சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு மீண்டும் ஏஆர்டி பரிசோதனை நடத்தப்பட்டது.
இரு பரிசோதனைகளிலும் கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் விரும்பும் நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஓமிக்ரான் உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் நிலையில் பரிசோதனை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகள் சிங்கப்பூர் வந்ததும் இரண்டாவது, நான்கு, ஐந்தாவது, ஆறாவது நாள்களில் சுயமாக ஏஆர்டி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூன்றாவது, ஏழாவது நாட்களில் அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் அவர்களுக்கு ஏஆர்டி பரிசோதனை நடத்தப்படும்.
விடிஎல் திட்டத்தின்கீழ் விமானம் மூலம் சிங்கப்பூர் வரும் பயணிகள், பயணத்துக்கு முன்பு கூடுதல் விலையுள்ள பிசிஆர் பரிசோதனைக்குப் பதிலாக நிபுணர்களால் நடத்தப்படும் ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர முடியாமல் போனால் வேறு எந்தெந்த திட்டங்களின்கீழ் சிங்கப்பூருக்கு வர முடியும்?
விடிஎல் திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர முடியாதவர்கள்,
அத்திட்டத்தின்கீழ் சிங்கப்பூருக்கு வர விருப்பம் இல்லாதவர்கள் நான்கு படிநிலைகளைக் கொண்ட சுகாதாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின்கீழ் சிங்கப்பூருக்கு வரலாம். இவ்வாறு வருபவர்கள்
கொவிட்-19க்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
கொவிட்-19 அபாயம் ஆகக் குறைவாக உள்ள நாடுகள் பிரிவு 1ன் கீழும் கொவிட்-19 அபாயம் ஆக அதிகம் உள்ள நாடுகள் பிரிவு 5ன் கீழும் இடம்பெறுகின்றன. மற்ற பிரிவுகளைக் காட்டிலும் பிரிவு 1ல் இடம்பெறும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை விதிமுறை அவ்வளவு கடுமையாக இருக்காது. பிரிவுகளைப் பொறுத்து பரிசோதனை விதிமுறையின் தீவிரம் அமையும். கூடுதல் தகவல்
களுக்கு https://safetravel.ica.gov.sg/shn-and-swab-summary எனும் இணையப்பக்கத்தை நாடலாம்.