சிங்கப்பூர், இந்தோனீசியா ஆகிய இரு நாடுகளின் மத்திய வங்கிகள் இணக்கக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன் புத்தாக்கம், நிதி சார்ந்த விதிமுறைகள் போன்ற அம்சங்களில் இணைந்து செயல்படுவது இந்த இணக்கக் குறிப்பின் இலக்கு.
கட்டணங்களில் புத்தாக்க அம்சங்களைச் சேர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து செயல்பட எண்ணம் கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம் அதை வெளிப்படுத்துவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம், இந்தோனீசியாவின் 'பேங்க் நெகாரா' மத்திய வங்கி இரண்டும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டன.
மத்திய வங்கிகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகளின் தொடர்பிலும் அதிகாரபூர்வமாக ஒத்துழைக்க இரு நாடுகளும் எண்ணம் கொண்டுள்ளன.
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகள் இதில் அடங்கும்.