சட்டவிரோத சூதாட்டம்; 13 பெண்கள் உட்பட 43 பேர் கைது

சட்டவிரோத சூதாட்டம்; 13 பெண்கள் உட்பட 43 பேர் கைது

2 mins read
fd204598-4c06-4b29-911a-1eb31ae55677
-

தீவு முழு­வ­தும் நடந்த அதி­ர­டிச் சோத­னை­யில் சட்­ட­வி­ரோத சூதாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் 30 ஆண்­கள் 13 பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கடந்த நவம்­பர் முதல் இம்­மாதம் 4ஆம் தேதி வரை நாடு முழு­வ­தும் பல்­வேறு இடங்­களில் சோதனை நடத்­தப்­பட்­டது.

2021 நவம்­பர் 20ஆம் தேதி பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 3ல் உள்ள உண­வங்­காடி நிலை­யத்­தில் நடந்த சோத­னை­யில் சட்டவிரோத சூதாட் டத்தில் ஈடுபட்டதாக நம்­பப்­படும் 26 முதல் 72 வயது வரையிலான எட்­டுப் பேரை பிடோக் காவல் நிலைய அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்தப்பட்டதாகக் கூறப்­படும் 580 வெள்ளி ரொக்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

டிசம்­பர் 18ஆம் தேதி மற்­றொரு சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. லோரோங் 15 கேலாங்கில் அந்­தச் சோதனை நடை­பெற்­றது.

அப்­போது சட்­ட­வி­ரோத சூதாட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­படும் 47 முதல் 81 வயது வரை நான்கு ஆண்­கள், ஐந்து பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவர்­களில் 47 வயது நபர் ஒருவர், சூதாட்­டத்தை நடத்தி­ய ­தாக ஆரம்­பக்கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வரு­கிறது.

டிசம்­பர் 24ஆம் தேதி லோரோங் 16 கேலாங்­கில் 46 முதல் 70 வயது நான்கு ஆண்­கள், இரண்டு பெண்­கள் கைதா­யி­னர். இச்சோதனையில் 1,885 வெள்ளி ரொக்­க­மும் சூதாட்­டத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கணினி­களும் கைப்­பற்­றப்­பட்­டன.

ஜாலான் பினாங்­கில் உள்ள கடை வீட்­டில் ஜன­வரி 2ஆம் தேதி மற்றொரு சோதனை மேற்­கொள்ளப் ­பட்­டது. இதில் 24 முதல் 65 வரை ஏழு ஆண்­களும் ஐந்து பெண்­களும் சிக்­கி­னர். அவர்­களில் 37 வயது நபர் ஒருவர், சூதாட்­டத்தை நடத்­தி­ய­தாகக் கூறப்படுகிறது.

அங்­கி­ருந்து மாற்­றி­ய­மைக்­கப்­பட்ட 13 கணி­னி­களும் 3,300 வெள்ளி ரொக்­க­மும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

ஜன­வரி 4ஆம் தேதி அன்று சூதாட்­டத்­திற்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட வெ­ட்ரன் ரோடு கடை வீட்டை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்டு சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட தாக நம்பப்படும் 22 முதல் 59 வயது வரையிலான ஏழு ஆண்­களையும் ஒரு பெண்­ணையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து 94,000 வெள்­ளிக்கு மேல் ரொக்­க­மும் சூதாட்­டத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­களும் கைப்­பற்­றப்­பட்­டன. அவர்­களில் 22 வயது ஆணும் 28 வயது பெண்­ணும் சூதாட்­டத்தை நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சட்டவிரோத சூதாட்­டத்தை நடத்­தும் இடத்தை நிர்­வ­கிப்­ப­வர்­க­ளுக்கு $5,000 முதல் $50,000 வரை அப­ரா­த­மும் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம். சட்டவிரோத சூதாட்­டத்­தில் ஈடு­படுவோருக்கு $5,000 வரை அப­ரா­த­மும் ஆறு மாதம் வரை சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.