கல் லேனில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து நிகழ்ந்ததில் அந்தத் தொழிற்சாலைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. டிடி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வளாகத்தில் தீ மூண்டதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்ற குடிமை தற்காப்புப் படையினர் மூன்று தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். உயிர்ச்சேதம் இல்லை. வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களில் தீ மூண்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தில் கடும் வெப்பம் நிலவியதால் சூட்டைக் குறைக்கும் நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டன.
தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்