நான்கு மாதக் குழந்தையை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்தோனீசிய பணிப்பெண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தீர்ப்பு வழங்கியபோது தற்போது 26 வயதாகும் நெந்தியின் கண்கள் கலங்கின.
2019ல் பொங்கோல் வீட்டில் வேலை செய்தபோது குழந்தையை அவர் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. வேறு இரண்டு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
"மூன்று குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள் இல்லை. கண்காணிப்புக் கேமரா இருந்துள்ளது. ஆனால் குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் அதில் இல்லை," என்று தனது தீர்ப்பில் ஜான் இங் தெரிவித்திருந்தார்.
குழந்தைகள், இளையர்கள் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் பெயர்களை வெளியிட அனுமதியில்லை என்ப தால் குழந்தையின் பெயர் தெரிவிக்கப்படவில்லை.
முந்தைய விசாரணையில் 2019ஆம் ஆண்டில் நெந்தி வேலைக்கு அமர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில் குழந்தையின் தந்தை பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக் குத் திரும்பிக் கொண்டிருந்தபோது தன்னை அழைத்த மனைவி குழந்தையின் காலில் சிராய்ப்புக்காயம் இருந்தது குறித்து தெரிவித்ததாகவும் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது குழந்தையின் காலில் சிராய்ப்பு காயம் இருந்ததாகவும் விசார ணையில் அவர் கூறியிருந்தார். குழந்தையின் பால் போத்தலில் உள்ள ரப்பர் மூடியும் வழக்கத்திற்கு மாறாக விரிந்து கிடந்த தாகவும் அவர் சொன்னார்.
இது குறித்து புகார் அளிக்கப் பட்டதால் வீட்டுக்கு வந்த காவல் துறையினர் நெந்தியை அழைத்துச் சென்றனர்.
ஆரம்பத்தில் நடந்த விசாரணையில் குழந்தையின் கால்களில் சிராய்ப்புக் காயம் ஏற்படுத்தியதை நெந்தி ஒப்புக் கொண்டார். குழந்தையின் தாயார் தினமும் திட்டியதால் அவர் மீது கொண்ட கோபத்தால் பால் போத்தலின் ரப்பர் மூடியில் உள்ள துளையை பெரிதாக்கிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் கடந்த ஆண்டு நடை பெற்ற நீதிமன்ற விசாரணையில் அந்தக் குற்றங்களை நெந்தி மறுத்து இருந்தார்.