குறுந்தகவல் மூலம் தனது வங்கி யின் வாடிக்கையாளர் சிலர் ஏமாற்றப்பட்டதால் ஓசிபிசி வங்கி பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை நேற்று அறிமுகம் செய்தது.
அதன்படி ஒரு காசுகூட மற்றொரு கணக்குக்கு மாற்றப்பட்டால் உடனே வாடிக்கையாளர் களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். 'பேநவ்' பரிவர்த்தனைக்கு தினசரி வரம்பு 5,000 வெள்ளியிலிருந்து ஆயிரம் வெள்ளியாக வழக்கத்தில் இருக்கும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
வாடிக்கையாளர்கள் இந்த வரம்பை தங்களுக்கு ஏற்ப நூறு வெள்ளி வரை மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உள்ள வரம்பு ஆயிரம் வெள்ளியிலிருந்து 100 வெள்ளிக்கு குறைக்கப்படும் என்று ஓசிபிசி தெரிவித்தது.
கடந்த மாதம் போலி குறுந்த தகவல் மூலம் ஏறக்குறைய 470 வாடிக்கையாளர்கள் 8.5 மில்லியன் வெள்ளியை இழந்ததையடுத்து ஓசிபிசியின் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.
மின்னஞ்சல் மற்றும் குறுந் தகவல்களில் இடம்பெறும் இணையத் தொடர்புகளையும் ஜனவரி 11 முதல் ஓசிபிசி நீக்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்க தனிப்பட்ட வாடிக்கையாளர் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.