'மின்னிலக்க வங்கி பாதுகாப்பு மேம்படும்; நம்பிக்கை மீளும்'

'மின்னிலக்க வங்கி பாதுகாப்பு மேம்படும்; நம்பிக்கை மீளும்'

3 mins read
a6eebe72-e486-4309-ae48-5cde49f6f61a
-

சிங்­கப்­பூ­ரில் வங்­கி­க­ளை­யும் வாடிக்கை­யா­ளர்­க­ளை­யும் பாதித்­துள்ள குறுஞ்­செய்தி மோச­டி­கள் கார­ண­மாக மின்­னி­லக்க வங்கிப் பரி­வர்த்­த­னை­களில் பொது­மக்­கள் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நம்­பிக்கை கொஞ்­சம் பாதிக்­கப்­ப­ட­லாம்.

ஆனால் மின்­னி­லக்க வங்கி முறை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய மேம்­படுத்­தப்­பட்ட பாது­காப்பு நடை­முறை­கள் கார­ண­மாக வாடிக்­கை­யா­ளர்­களி­டம் மீண்­டும் நம்­பிக்கை வலு­வடை­யும் என்று நிதித்­துறை­யும் இணையப் பாது­காப்பு நிறு­வனங்­களும் நம்­பு­கின்­றன.

வங்கி வாடிக்­கை­யா­ளர்­களைக் குறி­வைத்து அண்­மை­யில் பல மோசடி சம்­ப­வங்­கள் அரங்­கேற்­றப்­பட்­டன. அதைக் கருத்­தில்­கொண்டு அடுத்த இரண்டு வாரங்­களில் இங்­குள்ள வங்­கி­கள் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை நடை­மு­றைப்­படுத்த இருக்­கின்­றன.

சிங்­கப்­பூர் நாணய ஆணையமும் சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கமும் இதற்­கான ஏற்­பாடு­க­ளைச் செய்­துள்­ளன.

அத்­த­கைய ஏற்­பா­டு­கள், மின்­னி­லக்க வங்கிப் பாது­காப்பை மேம்­படுத்­தும் என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

இருந்­தா­லும்­கூட மோச­டி­களைத் தவிர்த்­துக்­கொண்டு விழிப்­பு­டன் இருந்து வர­வேண்­டி­ய­தன் தொடர்­பில் வாடிக்­கை­யா­ளர்­களுக்கு அதி­கம் போதிக்க வேண்­டும் என்­றும் அவர்­கள் கருது­கிறார்­கள்.

நம்­பிக்­கை­ பலப்­ப­டும்

ஆணை­ய­மும் வங்­கி­கள் சங்­க­மும் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் வங்­கி­க­ளுக்­கும் அவற்­றின் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் இடை­யில் நம்­பிக்­கை­யைப் பலப்­ப­டுத்­தும் என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் வர்த்­த­கப் பள்­ளி­யைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் லாரன்ஸ் லோ கருத்­து­ரைத்­தார்.

அந்­தப் புதிய பாது­காப்பு அம்­சங்­கள் பெரி­தும் தேவைப்­படும் நம்­பிக்­கையைப் பொது­மக்­க­ளி­டம் ஏற்­ப­டுத்­தும் என்று 'வெரி­டாஸ் டெக்­னா­ல­ஜிஸ்' என்று நிறு­வ­னத்­தின் சிங்­கப்­பூ­ருக்­கான இயக்­கு­நர் ஜஸ்­டின் லோ தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூர் அறி­வார்ந்த நாடாகத் திகழ முயற்­சி­களை முடுக்­கி­விட்டு உள்­ளது. இதைக் கருத்­தில்­கொண்டு நீண்­ட­கால நோக்­கில் மோச­டி­க­ளைத் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் நடப்­புக்கு வர­வேண்­டும்.

''வாடிக்­கை­யா­ளர்­கள் பயம் கார­ண­மாக மின்­னி­லக்க பரி­வர்த்­தனை­களில் இருந்து விலகி­வி­டு­வதற்கு முன்­பா­கவே இத்­தகைய நட­வ­டிக்­கை­களை அமல்­படுத்தி மின்­னி­லக்க வங்கி முறையில் அவர்­க­ளி­டம் நம்­பிக்கை வலு­வாக ஏற்­பட வழி­வ­குக்க வேண்­டும்," என்­றும் திரு லோ கூறி­னார்.

அதே­போல நிதித்­து­றைக்கு மின்­னி­லக்­க­ம­யம் உயிர்­நா­டி­யா­னது என்று கூறிய 'ஏடி­டி­எக்ஸ்' நிறு­வ­னத்­தின் தலைமை வர்த்­த­கத் துறை அதி­காரி திரு­வாட்டி ஊய் யீ சூ, அதே­வே­ளை­யில், மின்­னி­லக்­க­ம­யம் கார­ண­மாக எளி­தல் பாதிக்­கப்­படக்­கூ­டிய ஆபத்­து­களும் உண்டு என்று எச்­ச­ரித்­தார்.

பாது­காப்பு வலு­வாகும்

அண்­மைய மோச­டி­கள் கார­ண­மாக வாடிக்­கை­யா­ளர்­கள் நம்­பிக்கை பாதிக்­கப்­பட்டு இருந்­தா­லும் மின்­னி­லக்க வங்­கித் துறை மீண்டு மேலும் வலு­வான பாது­காப்­பான ஒன்­றா­கத் திக­ழும் என்று திருவாட்டி சூ நம்­பிக்­கை தெரி­வித்­தார்.

நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­ந­ரான ரவி மேனன், கடந்த புதன்­கி­ழமை கூட்­ட­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

இந்த ஆணை­ய­மும் இதர அர­சாங்க அமைப்­பு­களும் நிதித் தொழில்­துறை உள்­ளிட்ட பல அமைப்­பு­க­ளோ­டும் நிறு­வ­னங்­களோடும் சேர்ந்து செயல்­பட்டு மோசடி­க­ளுக்கு எதி­ரான ஒட்­டு­மொத்த ஆற்­ற­லைப் பலப்­ப­டுத்­தும் என்று அந்த அறிக்­கை­யில் திரு மேனன் தெரி­வித்து இருந்­தார்.

மின்­னி­லக்கப் பரி­வர்த்­த­னை­களில் எவை எவற்­றைச் செய்­ய­வேண்­டும் எவை எவற்­றைச் செய்­யக்கூடாது என்­பதை வாடிக்­கை­யா­ளர்­கள் தெள்­ளத்­தெ­ளி­வா­கப் புரிந்­து­கொள்ள உதவ பொது போதனை தொடர வேண்­டி­யது அவ­சி­ய­ம் என்று திரு­வாட்டி சூ குறிப்­பிட்­டார்.

முறை­யான இணை­யப் பாது­காப்பு பற்றி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்குப் போதிக்க வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை சிஸ்கோ அமைப்­பின் ஆசி­யா­னுக்­கான இணையப் பாது­காப்பு விற்­ப­னைத் துறை இயக்­கு­நர் ஜுவான் ஹுவாட் கூ வலி­யு­றுத்­திக் கூறினார்.

"இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­தும்போது வாடிக்­கை­யா­ளர்­கள் எப்­போ­தும் விழிப்­பு­டன் இருந்­து­கொள்ள வேண்­டும். தனிப்­பட்ட தக­வல்­களை முன்­பின் தெரி­யா­த­வர்­கள் யாருக்கும் எப்­போ­தும் கொடுக்­கக்கூடாது.

"கைபேசி முத­லான சாத­னங்­களை ஆகப் புதிய அம்­சங்­களுடன் மேம்­ப­டுத்தி வைத்­திருக்க வேண்டும். சந்­தே­கமான இணைப்பு­களில் தொடர்­பு­கொள்ளக்கூடாது," என்று அவர் தெரி­வித்­தார்.