காவல்துறையின் ஆளில்லா வானூர்தி பிரிவில் புதிதாக இரண்டு வானூர்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
அந்தப் புதிய வானூர்திகள் கூட்டத்தை நிர்வகிக்கவும் தேடி மீட்பு நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும். அவை இம்மாதம் 19ஆம் தேதி அறிமுகப்படுத்தப் பட்டன.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளில்லா வானூர்தி பிரிவின் செயல்முறை தளபத்திய அதிகாரியான காவல்துறை துணை சூப்பிரின்டென்டண்ட் சும் டுக் மெங், நான்கு வகை நடவடிக்கைகளில் முக்கியமாக காவல்துறை வானூர்திகள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
கண்காணிப்பு, அமலாக்கம், தேடி மீட்பு, காவல்துறை அதிகாரிகளின் பணி ஈடுபாடு ஆகியவை அந்த நான்கு நடவடிக்கைகள் என்று அவர் குறிப்பிட்டார்.

