கொள்ளைநோய் பாதிப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 12 வயதுக்குக் கீழ் உள்ள 17,699 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 2,586 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவரங்களை ஞாயிறு அன்று தமது ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், 12 வயதுக்குக் கீழ் உள்ள 140,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முதல் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 6,000 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

