ஓமிக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களின் சுமை அதிகரிப்பு

ஓமிக்ரானுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்களின் சுமை அதிகரிப்பு

2 mins read
b7e22eb5-c611-4fe4-9c10-a67ddf4873f8
-

அதிக வேகத்­தில் பர­வும் புதிய உரு­மா­றிய ஓமிக்­ரான் கிரு­மிக்கு எதி­ரான போராட்­டத்­தில் பொது மருத்­து­வர்­கள் அதிக பொறுப்­பு­களைச் சுமக்­கின்­ற­னர்.

ஏறக்­கு­றைய 1,800 தனி­யார் பொது மருந்­த­கங்­கள் சிங்­கப்­பூ­ரில் செயல்­ப­டு­கின்­றன.

அந்­தக் கிருமி மேலும் பர­வும் என எதிர்­பார்க்­கப்­படும் சூழ்­நி­லை­யில் எத்­த­கைய கொவிட்-19 நோயாளி­க­ளுக்கு அதிக கவ­னிப்­புத் தேவை என்­ப­தை­யும் வீட்­டில் குண­ம­டை­யக் கூடி­ய­வர்­களை தீர்­மா­னிப்­ப­தி­லும் பொது மருத்­து­வர்­கள் மிகப்­பெ­ரிய பங்கை ஆற்­று­கின்­ற­னர் என்று இவ்­வாண்டு தொடக்­கத்­தில் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தி­ருந்­தது.

ஹெல்த்வே மெடி­கல் போன்ற சில மருந்­த­கங்­கள் ஏற்­கெ­னவே அதிக நோயா­ளி­க­ளைக் கையாண்டு வரு­கின்­றன.

கடந்த ஆண்டு நவம்­பர்-டிசம்­பர் கால­கட்­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு அதன் 70 மருந்­த­கங்­க­ளி­லும் குறிப்­பி­டத்­தக்க அளவு தொற்­றுச்­சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன.

ஹெல்த்வே மெடி­கல் கார்ப்­ப­ரே­ஷ­னின் ஆரம்­பச் சுகா­தா­ரப் பிரி­வின் துணைத் தலை­வ­ரான டாக்­டர் நெல்­சன் வீ இதனை தெரி­வித்­தார்.

"நல்ல வேளை­யாக எங்­க­ளுக்கு வந்த நோயா­ளி­கள் லேசான அறி­கு­றி­க­ளைக் கொண்­டி­ருந்­த­னர்். இத­னால் வீட்­டி­லேயே அவர்­கள் பாதுகாப்­பாகக் குண­ம­டை­யும் சாத்­தி­யம் இருந்­தது," என்று அவர் கூறி­னார்.

பொது­மக்­களில் அதி­க­மா­னோர் தடுப்­பூசி போட்­டுள்­ளது இதற்கு ஒரு கார­ணம் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெற்­ற­வர்­களில் 91 விழுக்­காட்­டி­னர் முழு­மைா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னர். 54 விழுக்­காட்­டி­னர் கூடு­தல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுள்­ள­னர்.

பார்க்வே ஷென்­டன் நிறு­வ­னத்­தில் அதன் 31 பொது மருந்­த­கங்­க­ளின் ஒவ்­வொரு கிளைக்­கும் வாரத்­திற்கு ஐந்து முதல் ஏழு கொவிட்-19 நோயா­ளி­கள் வந்­துள்­ள­னர். இது, 2021ஆம் ஆண்­டின் கடைசி காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் சற்றுக்கு­றைவு.

விடி­எல் பய­ணத்­தின் விதி­கள் இதற்கு கார­ண­மாக இருக்­க­லாம் என்று பார்க்வே குழு­மத்­தின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் எட்­வின் சிங் கூறி­யுள்­ளார்.

ஓமிக்ரான் பரவலால் கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 20 வரை விடிஎல் ஆகாய, தரைவழிப் பயணங்களுக்கான டிக்கெட் விற்பனையை சிங்கப்பூர் நிறுத்தி வைத்திருந்தது. இருந்தாலும் நோயாளிகளின் பரிசோதனை முறை, நிர்வாகத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று டாக்டர் சிங் மேலும் தெரிவித்தார்.