புதிய எம்எஸ்எஃப்கேர் கட்டமைப்பு மூலம் 3,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களும் சமூகத் துறை பங்காளிகளும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரப்படுவர்.
இப்புதிய கட்டமைப்பு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குடும்பத்தை மையமாகக் கொண்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் திட்டங்களை ஒருங்கிணைக்கும் தளமாக புதிய கட்டமைப்பு விளங்கும்.
அத்துடன், தொண்டூழியர்களை இணைக்கும் தளமாகவும் கட்டமைப்பு செயல்படும்.
இதன்மூலம் தொண்டூழியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் ஆலோசனையும் பெறலாம்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் தொண்டூழியர், பங்காளி விருதுகள் மெய்நிகர் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சமூகத்துக்குச் சேவையாற்றிய ஏறத்தாழ 400 தொண்டூழியர்கள், சமூகத் துறை நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது புதிய கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்
பட்டது.
இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, சமூகத்துக்குப் பங்களித்த தொண்டூழியர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
"வலுவான, மீள்திறன்மிக்க குடும்பங்களை உருவாக்கவும் உதவி தேவைப்படுவோருக்கு ஆதரவு வழங்கவும் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் தொண்டூழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
தொண்டூழியர்களில் பெரும்
பாலானோர் நல்லுள்ளம் படைத்த தனிநபர்கள். அவர்கள் முன்களப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்," என்று அமைச்சர் மசகோஸ்
புகழாரம் சூட்டினார்.
உதவி தேவைப்படுவோருக்குத் தேவையான புதிய திட்டங்கள், தீர்வுகள் ஆகியவற்றுக்கான அடித்
தளத்தை புதிய எம்எஸ்எஃப்கேர் கட்டமைப்பு அமைக்கும் என்றார் அவர். தொண்டூழியத்தில் ஆர்வம் கொண்டோர் அதுதொடர்பான வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள msf.gov.sg/volunteer எனும் இணையவாசல் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

