இதுவரையில்லாத அளவில் சிங்கப்பூரில் கடைவீடுகள் விற்பனை கடந்த ஆண்டு $1.9 பில்லியனை எட்டியது.
2019ஆம் ஆண்டு, 2020ஆம் ஆண்டு ஆகியவற்றின் பரிவர்த்தனைகளைச் சேர்த்தாலும் கடந்த ஆண்டின் விற்பனைக்கு அது ஈடாகாது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது நிலையான வருமானம் தரக்கூடிய சொத்துகள் மீதான ஆர்வம் அதிகரித்ததாக சொத்து நிறுவனமான நைட் ஃபிரேங்க் சிங்கப்பூர் கூறியது.
அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்து விலை தணிக்கும் நட
வடிக்கைகளின் விளைவாக கடைவீடுகளின் விற்பனை சூடுபிடிக்கக்கூடும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடைவீடுகளை வாங்குவோரும் விற்பவர்களும் கூடுதல் முத்திரை வரி செலுத்த தேவையில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.
மேலும் வர்த்தக நிமித்தமாக கடைவீடுகளை வாங்க வெளிநாட்டவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடைவீடுகள் விற்பனை இவ்வாண்டு $2 பில்லியனை எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்
படுவதாக நைட் ஃபிரேங்க்
சிங்கப்பூரின் முதலீட்டுச் சந்தைகள் பிரிவின் நிர்வாக இயக்குநர் திருவாட்டி மேரி சாய் தெரிவித்தார்.

