தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாத்தாம், பிந்தான் சென்றிட பேரார்வம் காட்டும் பயணிகள்

1 mins read
0fe80689-814a-47ed-9adf-2ee50d7052bf
-

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் பய­ணி­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள தேவை­யின்றி பாத்­தா­முக்­கும் பிந்­தா­னுக்­கும் வர­லாம் என்ற இந்­தோ­னீ­சியா அறி­வித்­துள்­ளது.

இத­னைத் தொடர்ந்து, அவ்­விரு தீவு­க­ளுக்­கும் படகு சேவை வழங்கு­வோரை அதி­க­மா­னோர் தொடர்பு­கொண்டு, விவ­ரம் கேட்டு வரு­கின்­ற­னர்.

அத்­தீ­வு­க­ளுக்­குச் சென்­று­விட்டு சிங்­கப்­பூர் திரும்­பும் பய­ணி­கள் இல்­லத் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்ற வேண்­டும் என்ற சூழ­லி­லும் அங்கு செல்ல பலர் ஆர்­வம் காட்டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பய­ணப் பாதை ஏற்­பாட்­டின்­கீழ், சிங்­கப்­பூர் பய­ணி­கள் பாத்­தா­மில் உள்ள நொங்­சா­புரா படகு முனை­யம் வழி­யா­க­வும் பிந்­தா­னில் உள்ள பண்­டார் பெந்­தான் தெலானி படகு முனை­யம் வழி­யா­க­வும் இந்­தோ­னீசி­யா­வி­னுள் நுழைய அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அவர்­கள் முழு­மை­யாக கொவிட் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும், அத்­து­டன், இந்­தோ­னீசியா சென்­ற­டை­யு­முன் குறைந்­தது கடைசி 14 நாள்­கள் சிங்­கப்­பூ­ரில் இருந்­தி­ருக்க வேண்­டும்.

மேலும், சிங்­கப்­பூ­ரில் இருந்து புறப்­ப­டு­வ­தற்கு மூன்று நாள்­க­ளுக்­குள் 'பிசி­ஆர்' பரி­சோ­த­னை­யில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­றி­ருக்க வேண்­டும். அவர்­கள் இந்­தோ­னீ­சியா சென்­ற­தும் அங்­கும் ஒரு­முறை 'பிசி­ஆர்' பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்.

அங்கு சென்­று­விட்டு சிங்­கப்­பூர் திரும்­பு­வோர் இங்கு ஏழு நாள்­களுக்கு இல்­லத் தனிமை உத்­த­ர­வின்­கீழ் இருக்க வேண்­டும்.