முறைத்துப் பார்த்தவரைக் கத்தியால் வெட்டிய முன்னாள் ஐடிஇ மாணவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

முறைத்துப் பார்த்தவரைக் கத்தியால் வெட்டிய முன்னாள் ஐடிஇ மாணவருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

2 mins read
7799f93a-8587-421f-8437-739fc585cbfa
-

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் படித்­த­போது, முறைத்­துப் பார்த்த சம்­ப­வம் தொடர்­பில் இன்னொரு மாண­வ­ரைக் கத்­தி­யால் தாக்­கிய இளை­யர் குறைந்­தது ஓராண்­டு காலத்திற்குச் சீர்­தி­ருத்­தப் பயிற்­சி­பெற வேண்­டும் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்ளது.

இப்­போது 19 வய­தா­கும் பழ­னி­தாஸ் ராம­தாஸ் எனும் அந்த இளை­யர், தாக்­கு­த­லில் ஈடு­பட்ட சம­யத்­தில் ஏமாற்று, உரி­ம­மின்றி வாக­னம் ஓட்­டி­யது உள்­ளிட்ட குற்­றங்­க­ளுக்­கா­கப் பிணை­பெற்று வெளி­யில் இருந்­தார்.

சக மாண­வ­ரைப் பயங்­க­ர­மான முறை­யில் பழ­னி­தாஸ் தாக்­கி­ய­தா­க­வும் அவர் தப்­பிக்க முயன்­ற­போது விரட்­டி­ய­தா­க­வும் துணை அர­சாங்க வழக்­க­றி­ஞர் சியா ஈ வெய் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

தாக்­கு­த­லுக்­குண்­டான மாண­வருக்கு அப்­போது வயது 19. அவ­ருக்கு இடது தோளி­லும் காதி­லும் வெட்­டுக்­கா­யங்­கள் ஏற்­பட்­டன.

தீர்ப்­பை­ய­டுத்து, பழ­னி­தாஸ் சீர்­தி­ருத்­தப் பயிற்சி நிலையத்­தில் அடைக்­கப்­படுவார். அங்கு அவர் கடு­மை­யான விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நடக்க வேண்­டும். அங்கு அவ­ருக்கு ஆலோ­ச­னை­யும் வழங்­கப்­படும்.

தாக்­கு­த­லில் பாதிக்­கப்­பட்ட மாண­வ­ருக்கு $135.66 இழப்­பீடு வழங்­கு­மா­றும் அவ­ருக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டது.

ஆயு­தத்­தால் காயப்­ப­டுத்­தி­யது, ஏமாற்று உட்­பட தன்­மீது சுமத்­தப்­பட்ட எட்­டுக் குற்­றச்­சாட்­டு­க­ளைக் கடந்த மாதம் பழ­னி­தாஸ் ஒப்­புக்­கொண்­டார்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி 15ஆம் தேதி, தம் நண்­பர்­களில் ஒரு­வருக்குப் பிரச்­சினை இருப்­ப­தால் கல்­விக் கழ­கத்­திற்கு வரும்­போது ரொட்டி வெட்­டும் கத்தியை எடுத்து வரும்­படி தம் கூட்­டாளி ஒரு­வரை பழ­னி­தாஸ் கேட்­டுக்­கொண்­டார்.

அவர் சொன்­ன­படி அந்த இளை­ய­ரும் மறு­நாள் ஐடி­இக்கு வந்­த­போது கத்தி எடுத்து வந்­தார்.

கல்­விக் கழக வளாக உண­வகத்­தில் இருந்­த­போது, முறைத்­துப் பார்த்த சம்­ப­வம் தொடர்­பில் பழனி­தா­சுக்­கும் இன்­னொரு மாண­வருக்கும் வாக்­கு­வா­தம் எழுந்­தது.

அத­னைத் தொடர்ந்து, கார் நிறுத்­தப் பூங்­கா­விற்கு வரு­மாறு அம்­மா­ண­வ­ரி­டம் கூறிய பழ­னி­தாஸ், பின்­னர் அங்கு அவ­ரைக் கத்­தி­யால் வெட்­டி­னார்.

அங்­கி­ருந்து தப்­பித்த அம்­மா­ண­வர், தம் தந்­தை­யைத் தொடர்­பு­கொண்டு உத­வி­கோ­ரி­னார். அதனையடுத்து, அவரின் தந்தை காவல்­து­றைக்­குத் தக­வல் தந்­தார்.

வெட்­டுப்­பட்ட மாண­வர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். அவ­ருக்கு நான்கு நாள்­கள் மருத்­துவ விடுப்பு தரப்­பட்­டது.

சம்­ப­வத்­திற்­குப்­பின் கல்­விக் கழ­கத்­தை­விட்டு வெளி­யே­றிய பழனி­தாஸ், தாக்­கு­த­லுக்­குப் பயன்­படுத்­திய கத்­தியை வீசி­யெ­றிந்­து­விட்­டார். பின்­னர் 2021 பிப்­ர­வரி 17ஆம் தேதி அவர் கைது செய்­யப்­பட்­டார்.