கடந்த டிசம்பரிலிருந்து எண்ணிக்கை இரட்டிப்பானது

கடந்த டிசம்பரிலிருந்து எண்ணிக்கை இரட்டிப்பானது

3 mins read
22ba8ae9-c794-4ca1-b672-b744099dc964
-

கொவிட்-19 தொடர்­பான, தொடர்­பில்­லாத சுவா­சப் பிரச்­சி­னை­கள் கார­ண­மா­கக் கடந்த ஏழு வாரங்­

க­ளாக கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை இரு மடங்கு அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத் தொடக்­கத்­தி­லி­ருந்து இம்­மா­தத்­தின் முதல் மூன்று வாரங்­கள் வரை சுவா­சப் பிரச்­சி­னை­ கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை இரு மடங்கு உயர்ந்­

தி­ருப்­ப­தாக கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யின் சிறார்

மருத்­து­வப் பிரி­வின் தொற்­று­நோய் மருத்­து­வச் சேவைத் தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் தூன் கோ செங் கூறி­னார்.

சற்று கடு­மை­யான அறி­கு­றி­

க­ளு­டன் மருத்­து­வ­ம­னை­யில் அனு

­ம­திக்­கப்­படும் சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

அவர்­களில் ஏறத்­தாழ 50 விழுக்­காட்­டி­னர் ஐந்து வய­துக்­கும் குறை­வான சிறு­வர்­கள்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இந்த வய­துப் பிரி­வி­னர் இன்­னும் தகுதி பெற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பாதிக்­கப்­பட்­டுள்ள ஏனைய சிறு­வர்­கள் ஐந்து வய­துக்­கும் 12

வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

அவர்­களில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் 12 வய­துக்­கும் குறை­வா­ன­வர்­கள் என்று சிங்­கப்­பூ­ருக்­கான மருத்­து­வச் சேவை­கள் இயக்கு­நர் கென்­னத் மாக் கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தி­ருந்­தார்.

கொவிட்-19 தொடர்­பான, தொடர்­பில்­லாத சுவா­சப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்டு, கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­

யி­லும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யி­லும் அனு­ம­திக்­கப்­படும் சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏற்­றம் கண்­டி­ருப்­பதாக பேரா­சி­ரி­யர் மாக் தெரி­வித்­தார்.

இப்­பி­ரச்­சி­னை­யால் ஒரே வாரத்­தில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­

ம­திக்­கப்­பட்­டுள்ள சிறு­வர்­க­ளின் எண்­ணிக்கை இரட்­டிப்­ப­டைந்­

தி­ருப்­ப­தாக பேரா­சி­ரி­யர் தூன் கூறி­னார்.

ஆனால் இது­கு­றித்த புள்­ளி­வி­வ­ரங்­களை அவர் வெளி­யி­ட­வில்லை.

சமூக அள­வில் ஒன்­று­கூ­டல்­கள் அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­லும் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் குறித்து பொது­மக்­க­ளி­டையே நிலவி வரும் மெத்­த­னப்­போக்­கா­லும் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக பேரா­சி­ரி­யர் தூன் கூறி­னார்.

ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை கார­ண­மாக இம்­மா­தம் சமூக அள­வில் மேலும் பல­ருக்குக்

கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளதை அவர் சுட்­டி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை தொடங்­கி­ய­தி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரில் 12 வய­துக்­கும் குறை­வான மொத்­தம் 17,699 சிறு­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­களில் 2,586 பேர் மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­க­வும் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று பதி­விட்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­

ப­டு­வோர், வீட்­டி­லி­ருந்து குண­ம் அடை­யும் திட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றால் இரண்டு அல்­லது மூன்று நாள்­க­ளுக்கு மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற்­று­விட்டு திரும்புவ­தாக பேரா­சி­ரி­யர் தூன் கூறி­னார்.

வீட்­டி­லி­ருந்து குண­ம­டை­யும் திட்­டத்­துக்­குத் தகுதி பெறா­த­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அதி­க­பட்­சம் ஏழு நாள்­க­ளுக்­குத் தங்­க­லாம் என்­றார் அவர்.

ஏற்­கெ­னவே ஆஸ்­துமா, புரோன்­கியாட்­டிஸ், நிமோ­னியா போன்ற நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்ட நோயாளி­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அவர்­க­ளது உடல்­நிலை மேலும் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

அவர்­க­ளுக்­குக் காய்ச்­சல், வலிப்பு, நீரி­ழப்பு ஆகி­யவை ஏற்­

ப­டக்­கூ­டும் என்று பேரா­சி­ரி­யர் தூன் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் மாதம் 1ஆம் தேதி முதல் இம்­மா­தம் 16ஆம் தேதி வரை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 12 வய­துக்­கும் குறை­வான 14,380 சிறு­வர்­களில் நால்­வ­ருக்­குக்

கடு­மை­யான பாதிப்பு ஏற்­பட்­டது.

அவர்­க­ளுக்­குக் கூடு­தல் உயிர்­வாயு அல்­லது தீவிர சிகிச்சை தேவைப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் சிறு­வர்­க­ளு­டன் பதிவு செய்­யப்­பட்ட பரா­ம­ரிப்­பா­ளர் மருத்­து­வ­ம­னை­யில் தங்­க­லாம் என்­றார் பேரா­சி­ரி­யர் தூன்.