இம்மாத தொடக்கத்தில் 39 வயது பெண்ணின் மரணத்துக்கு கொவிட்-19 தடுப்பூசி காரணம் இல்லை என்றும் இதய செயல் இழப்பால் அவர் மாண்டதாகவும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக இதய சிகிச்சை நிலையமும்
சிங்கப்பூர் தேசிய இதய சிகிச்சை நிலையமும் தெரிவித்துள்ளன.
திருவாட்டி கிறிஸ்டினா ரோட்ரிகுவெஸ் சியாவின் இதய செயலிழப்புக்கு கொவிட்-19 தடுப்பூசி நேரடிக் காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இரண்டு தடுப்பூசிகளையும் அவர் போட்டுக்கொண்ட பிறகு திருவாட்டி சியாவுக்கு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்று இரு நிலையங்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்
பட்டது.
மரணம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அறிக்கையின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு திருவாட்டி சியாவுக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டதாக அவரைத் திருமணம் செய்துகொள்ள இருந்த திரு நிப்ரோய்னர் ஜெரமி தமது சமூக வலைத்தளத்தில்
பதிவிட்டிருந்தார்.

