400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

400 மின்சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
ab7b59a6-a7ff-4512-bf26-2dba84ddec5b
பறிமுதல் செய்யப்பட்ட மின்சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருள்கள். படம்: குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் -

மொத்­தம் 400 மின்சிக­ரெட்­டு­கள், அவற்றை செயல்­ப­டுத்­து­வதற்­குத் தேவை­யான 8,100 'ரீஃபில் பாட்ஸ்' எனும் பொருள்­கள் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­துள்­ள­னர். மலே­சியா­வி­லி­ருந்து கடத்­தல்­கா­ரர்­கள் சிலர் பழங்­க­ளைக் கொண்­டு­வரும் லாரி­யில் இவற்­றைக் கடத்தி வர முயன்­ற­னர். அதி­காரி­கள் அவர்­களை முறி­ய­டித்­த­னர்.

மலே­சி­ய­ரான லாரி­யின் ஓட்­டு­நர், அவ­ரின் உத­வி­யா­ளர் ஆகிய இரு­வ­ரும் விசா­ர­ணைக்­காக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­னர். சென்ற மாதம் 28ஆம் தேதி­யும் இதே­போல் சில மின்சிக­ரெட்­டு­களும் 'ரீஃபில் பாட்ஸ்' பொருள்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

தனிப்­பட்ட முறை­யில் பயன்­படுத்­த மின்­சி­க­ரெட்­டு­களை இணை­யத்­தில் வாங்கி சிங்­கப்­பூருக்­குத் தரு­விக்­கும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளி­க்கு அதி­க­பட்­ச­மாக 10,000 வெள்ளி அப­ரா­த­மும் ஆறு மாதச் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.