மோசடிக்காரர்களுக்காக வங்கிக் கணக்கைத் திறந்ததற்குச் சிறை

மோசடிக்காரர்களுக்காக வங்கிக் கணக்கைத் திறந்ததற்குச் சிறை

1 mins read
13894bea-d2e9-48c3-9a47-f02bb51cc277
-

அந்­நி­யருக்காக 22 வயது ஆட­வர் ஒரு­வர் தனது பெய­ரில் வங்­கிக் கணக்­கைத் திறந்­தி­ருக்­கி­றார். அவ்­வாறு செய்­வ­தற்கு வெகுமதியாக 500 வெள்ளி தரப்போவதாக வில்­சன் என்று தன்னை அடை­யா­ளப்­படுத்­திக்­கொண்ட ஒரு­வர் கூறி­யி­ருந்­தார்.

அதற்­குப் பிறகு அந்த வங்­கிக் கணக்கை அடை­யா­ளம் தெரி­யா­த­வர்­கள் ஏமாற்றி பணம் பறிக்­கும் மோச­டிச் செயல்­க­ளுக்­கா­கப் பயன்­படுத்­தி­யி­ருக்­கி­றார்கள். இணைய வர்த்­தக மோச­டிச் செய­ல்களின் மூலம் சுமார் ஐந்து நாள்­களில் எட்டு பேரி­ட­மி­ருந்து 35,000 வெள்­ளிக்­கும் மேலான தொகை­ பறிக்கப்பட்டது.

ஏமாற்­றி­ய­தற்­காக முகம்­மது ஹஃபிசு­தீன் ஹசா­னு­தீ­னுக்கு மூன்று மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. கணி­னி­யின் தவ­றான பயன்­பாட்­டுக்­கான சட்­டத்­தின்­கீழ் அவர் மீது சுமத்­தப்­பட்ட மேலும் ஒரு குற்­றச்­சாட்­டும் தீர்ப்­பளிக்­கும்­போது கருத்­தில்­கொள்­ளப்­பட்­டது.

முகம்­மது ஹஃபிசு­தீன் நேற்று முன்­தி­னம் தனது சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்­கி­னார்.

"பணத்­துக்­காக இணைய மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­து­வ­தற்­குத் தனது வங்­கிக் கணக்கை விட்­டுக்­கொ­டுத்த முதல் அரசுத்தரப்பு வழக்கு இது. வங்­கிக் கணக்கை மோச­டிக்­கா­ரர்­கள் எவ்­வாறு பயன்­படுத்­து­வர் என்­பதை அறவே எண்­ணா­மல் மேற்­கொள்­ளப்­பட்ட செயல் இது," என்று அரசுத்தரப்பு வழக்­க­றி­ஞர் எஸ்­தர் வோங் கூறி­னார்.

குற்­ற­வா­ளிக்கு மூன்­றி­லி­ருந்து நான்கு மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கு­மாறு திரு­வாட்டி வோங் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­டார். சென்ற ஆண்­டின் முற்­பா­தி­யில் மட்­டும் 19,444 மோச­டிச் சம்­பவங்­கள் குறித்து புகார்­கள் அளிக்­கப்­பட்­டதை அவர் சுட்­டி­னார். இணை­யம் வழி நடத்­தப்­பட்ட மோசடி­களில் குறைந்­தது 2.4 மில்­லி­யன் வெள்ளி பறிக்­கப்­பட்­டது.