175,000 பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டது

175,000 பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசி போடப்பட்டது

2 mins read
4b4e5b6c-e4d0-454e-ad01-b9211568728c
கடந்த ஒரு மாதத்தில் 25,000க்கு மேற்பட்ட சிறார்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம்

ஐந்து முதல் 11 வயது வரை­யி­லான சிறார்­க­ளுக்­குத் கொவிட்-19 தடுப்­பூசி போடும் தேசிய திட்­டம் தொடங்­கப்­பட்டு ஒரு மாதம் கழிந்த நிலை­யில் 175,000க்கு மேற்­பட்ட சிறார்­க­ளுக்­குக் குறைந்­தது ஒரு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் 25,000க்கு மேற்­பட்ட சிறார்­க­ளுக்கு இரண்டு தடுப்­பூ­சி­களும் போடப்­பட்டு விட்­டன. அவர்­களில் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங்­கின் மூன்று பிள்­ளை­களில் ஆக இளை­ய­வ­ரும் அடங்­கு­வார்.

இந்த விவ­ரங்­களை நேற்று தமது ஃபேஸ்புக் பதி­வில் வெளி­யிட்ட அமைச்­சர் சான், உடன்­பிறந்­த­வர்­களுடன் தடுப்­பூசி போட்டுக் கொள்ள அவர்கள் செல்லும் நாள் வரை காத்­தி­ரா­மல், தங்­கள் பிள்­ளை­க­ளுக்­கு முன்னரே தடுப்­பூசி போடும் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டதை பெற்­றோர் பலர் வர­வேற்­றுள்­ள­னர் என்­றார்.

இம்­மா­தம் 25ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஐந்­தி­லி­ருந்து 11 வயது வரை­யி­லான சிறார்­கள் அவர்­க­ளுக்­காக ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கும் தடுப்­பூசி நிலை­யத்­துக்கு முன்­பதி­வின்றி தங்­கள் பெற்­றோ­ரு­டன் சென்று தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு வரு­கின்­ற­னர். இந்த ஏற்­பாடு திங்­கட்­கி­ழமை முதல் வியா­ழக்­கி­ழமை வரை நடப்­பில் இருக்­கும்.

முன்­ன­தாக, திங்­கட்­கிழமை முதல் வியா­ழக்­கி­ழமை வரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள செல்­லும் தங்­கள் உடன்­பி­றந்­த­வர்­க­ளு­டன்­தான் ஐந்­தி­லி­ருந்து முதல் 11 வயது வரை­யி­லான சிறார்­கள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டது.

இந்த ஆகக் கடைசி ஏற்­பாட்­டின்படி, இந்த வாரம் 5,600 சிறார்­கள் தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்­குச் சென்று தடுப்­பசி போட்­டுக் கொண்­டுள்­ள­னர் என்று திரு சான் விவ­ரித்­தார்.

முன்­ப­தி­வின்றி தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள இம்­மா­தம் 31ஆம் தேதியை அதா­வது சீனப் புத்­தாண்டு தினத்­துக்கு முந்­தைய நாளைத் தேர்வு செய்­தி­ருக்­கும் பெற்­றோர், அன்­றைய தினம் பிற்­பகல் 1 மணிக்­குள்­ளாக சென்று விடு­மாறு அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார். அன்­றைய தினம் தடுப்­பூசி நிலை­யங்­கள் வழக்­கத்­துக்கு முன்­பாக மூடப்­படும் என்­பதே அதற்­குக் கார­ணம்.

பிப்­ர­வரி 1 மற்­றும் 2ஆம் தேதி­க­ளின் சீனப் புத்­தாண்டு விடு­முறை கார­ண­மாக தடுப்­பூசி நிலை­யங்­கள் மூடப்­பட்­டி­ருக்­கும்.

முன்­ப­தி­வின்றி தங்­கள் பிள்­ளை­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளும் நாட்­களை வெள்­ளிக்­கி­ழ­மைக்­கும் வார­யி­றுதி நாட்­க­ளுக்­கும் நீட்­டிக்க முடி­யுமா என்று பெற்­றோர் சிலர் கேட்­டுள்­ள­னர் என்று குறிப்­பிட்ட திரு சான், வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லும் வார­யி­றுதி நாட்­க­ளி­லும் இயல்­பான தடுப்­பூசி முன்­ப­தி­வு­கள் நிறை­வ­டைந்­தி­ருப்­பதே அதற்­குக் கார­ணம் என்று விளக்­கி­னார்.

இன்­னும் அதி­க­மான சிறார்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு, சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­களும் சுகா­தார அமைச்­சும் முன்­ப­தி­வு­க­ளைக் கண்­கா­ணித்து, குடும்­பங்­க­ளுக்கு ஏது­வாக ஏற்­பா­டு­களை மாற்றி அமைப்­பது பற்றி பரி­சீ­லிக்­கும் என்­றார் திரு சான்.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் கல்வி அமைச்­சும் ஆரம்­ப­கால பாலர்­ப­ருவ மேம்­பாட்டு அமைப்­பும் இணைந்து ஏற்­பாடு செய்த இணை­யக் கருத்­த­ரங்கு பற்­றிய காணொளி ஒளிப்­ப­திவு பற்றி பெற்­றோ­ருக்­குக் கேள்­வி­கள் இருந்­தால் அதை அமைச்­சுக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­லாம் என்­றும் அமைச்­சர் கேட்­டுக் கொண்­டார்.

இந்­தக் காணொளி கல்வி அமைச்­சின் யூடி­யூப் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 23ஆம் தேதி வரை, 12 வய­துக்கு உட்­பட்ட 17,699 சிறார்­க­ளுக்கு கொவிட்-19 கிருமி தொற்­றி­யுள்­ளது.

அவர்­களில் 2,586 சிறார்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்­கள்.