சீனப் புத்தாண்டுக் காலத்தில் கூடுதல் பாதுகாப்பு நிர்வாக அமலாக்க நடவடிக்கைகள்

சீனப் புத்தாண்டுக் காலத்தில் கூடுதல் பாதுகாப்பு நிர்வாக அமலாக்க நடவடிக்கைகள்

2 mins read
5aca0379-9a7d-494c-ad3a-a669443ce683
சைனா­ட­வுன் காம்­பி­ளக்­ஸில் உள்ள சந்தை, உண­வங்­காடி நிலை­யங்­களில் நிறுத்தப்படும் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் அங்கு கூட்டம் அதிகமாகக் கூடுவதைத் தவிர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், சீனப் புத்­தாண்­டுக் காலத்­தில் சைனா­ட­வு­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­கள், பூங்­காக்­கள், உணவு, பானக் கடை­கள் ஆகி­ய­வற்­றில் பாது­காப்பு நிர்­வா­கம் தொடர்­பான கூடு­தல் அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இர­வு­நே­ரக் கேளிக்கை விடு­தி­கள் உட்­பட உணவு, பானக் கடை­கள் முழு­வ­தி­லும் பல்­வேறு அமைப்­பு­கள் தங்­கள் சோதனை நட­வ­டிக்­கை­களை அதி­க­ரிக்­கும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

"இந்த விழாக்­கா­லத்­தில், பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­களும் அம­லாக்க அதி­கா­ரி­களும் நாள்­தோ­றும் பல்­வேறு இடங்­களில் பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பதை உறுதி செய்­வார்­கள்.

"சைனா­ட­வுன் காம்­பி­ளக்­ஸில் உள்ள சந்தை, உண­வங்­காடி நிலை­யங்­களில் பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­கள் நிறுத்­தப்­ப­டு­வார்­கள். அங்கு 300 பேர் வரம்பு எட்­டப்­பட்­ட­தும் மேலும் மக்­கள் அங்கு செல்­வதை அவர்­கள் தடுத்து நிறுத்­து­வார்­கள்.

"தேசிய பூங்­காக் கழ­கம் நிர்­வகிக்­கும் பூங்­காக்­களில் உள்ள கூடார முகாம்­கள், 'பாபக்கியூ' இடங்­கள் அனைத்­தும் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும்," என்­றும் அமைச்சு கூறி­யது.

"பூங்­காக்­களில் உள்ள திடல்­கள், கட்­டாந்­தரை விளை­யாட்­டுக் கூடங்­கள், கூரை­யு­டன் கூடிய ஒதுங்­கு­மி­டங்­கள், கார் நிறுத்­தங்­கள் ஆகிய இடங்­களில் கூட்­டம் அள­வுக்கு அதி­க­மா­கக் கூடி­னால் அந்த இடங்­க­ளை­யும் தேசிய பூங்­காக் கழ­கம் தற்­கா­லி­க­மாக மூடி­வி­டும்.

"இந்த விழாக்­கா­லத்­தில், முதி­ய­வர்­கள், குறிப்­பாக தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர், சந்­தை­க­ளுக்­குச் செல்­வ­தைத் தவிர்க்க வேண்­டும். மாறாக, அவர்­கள் தங்­கள் குடும்ப உறுப்­பி­னர்­கள் அல்­லது இளைய நண்­பர்­கள் ஆகி­யோரை உணவு மற்­றும் அத்­தி­யா­வ­சிய பொருள்­க­ளை­ வாங்­கி­வ­ரச் சொல்­ல­லாம்," என்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு விவ­ரித்­தது.

"இந்த விழாக்­கா­லத்­தில் அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் ஒன்­று­கூ­டு­வது வழக்­கம் என்­றா­லும் அதி­க­ரித்து வரும் ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்­றைக் கருத்­தில் கொண்டு, மிகுந்த பாது­காப்­பு­டன் இருப்­ப­தும் இப்­போது அவ­சி­ய­மா­கிறது.

"ஆகவே, நடப்­பில் உள்ள பாது­காப்பு நிர்வாக நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்றி நமது சமூகப் பொறுப்­பு­உணர்வை வெளிப்­ப­டுத்­து­வோம். இதன் மூலம் விழாக்­கா­லக் கொண்­டாட்­டத்தை நாம் மகிழ்ச்சியாகவும் பாது­காப்­பாகவும் வெளிப்­படுத்த லாம்," என்­றும் அமைச்சு வலி­யுறுத்­தி­யது.