இம்மாதம் 25ஆம் தேதி வரை திரட்டப்பட்ட தரவுகளிலிருந்து மொத்தம் 48 உள்ளூர்வாசிகளிடமும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 150 பேரிடமும் BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது.
BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி, BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமியைவிட வேகமாகப் பரவக்கூடியது என்றும் அவற்றுக்கிடையே எவ்வித குறிப்பிடத்தக்க மருத்துவ மாற்றங்கள் இருப்பதில்லை என்றும் டென்மார்க் சுகாதார அமைப்புகள் தெரிவித்திருப்பதாக, சிங்கப்பூர் சுகாதார அமைச்சு நேற்று கூறியது.
"BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி பற்றியும் அதன் கடுமையான போக்கு, தடுப்புச் சக்தி ஆற்றல், வேகமாகப் பரவும் தன்மை போன்றவை எவ்வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த கூடுதல் தரவு நமக்குத் தேவைப்படுகிறது," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
BA.1 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி தற்போது உலகளவில் 98% சம்பவங்களில் காணப்படுகிறது.
ஆனால் டென்மார்க்கில், இம்மாத இரண்டாவது வாரத்தில் ஆதிக்கம் செலுத்திய BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமி, BA.1 கிருமியை ஓரங்கட்டியது.
பிரிட்டிஷ் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு, இந்த BA.2 ஓமிக்ரான் மரபுவழிக் கிருமியை அணுக்க மாகக் கண்காணித்து வருகிறது.
BA.2 கிருமி, BA.1 கிருமியை விட ஒன்றரை மடங்கு அதிகமாகப் பரவக்கூடியது என்று டென்மார்க்கின் தலைசிறந்த தொற்றுநோய் எதிர்ப்பு அமைப்பான ஸ்டெட்டன்ஸ் சீரம் கழகம் தெரிவித்துள்ளது.

