வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியவர்களுக்கு பாராட்டு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவியவர்களுக்கு பாராட்டு

1 mins read
2b05a48a-f37e-474f-bdc6-3c2474686df6
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்று உச்­சத்­தில் இருந்த காலத்­தில் 2020 ஜூன் மாதத்­தில் தங்­கு­வி­டு­தி­யில் உள்ள 5,000க்கு மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் வேலைக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார்­கள். அவர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­யும் பொருட்டு, அவர்­கள் கைபே­சிச் செய­லி­க­ளைப் பயன்­படுத்தி, தங்­கள் உடல் வெப்­ப­நிலை­யைத் தெரி­விக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், வழி­காட்டி விதி­முறை­கள் ஆங்­கி­லத்­தில் இருந்­த­தால், மொழி தெரி­யாத அந்த ஊழி­யர்­கள் சிர­மப்­பட்­ட­னர்.

இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண ஒரு குழு­வி­னர் செய­லில் இறங்­கி­னர்.

கொக்­லி­ஸன்ட் நிறு­வ­னத்­தின் திரு­மதி பிர­திபா குர்­னூல், தமது சகாக்­களை ஒன்­று­தி­ரட்டி, அறி­வார்ந்த தேசம் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்­கக் குழு­வு­டன் சேர்ந்து வழி­காட்­டி­களை விளக்­கும் காணொ­ளி­களை வங்காள, தமிழ், இந்தி ஆகிய மொழி­களில் வெளி­யிட்­டார்.

சவால்மிக்க காலத்தில் சிறப்­பாக செயல்­பட்டு, பிரச்­சி­னைக்­குத் தீர்வு கண்ட திரு­மதி பிர­திபா உட்­பட நால்­வ­ருக்கு நேற்று அறி­வார்ந்த தேசத் தூதர்­க­ளுக்­கான நட்­சத்­திர விருது வழங்கிச் சிறப்­பிக்­கப்­பட்­டது.

ஹார்ட்பீட்@பிடோக் வளா கத்தில் நேற்று விரு­து­களை வழங்­கிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, "அறி­வார்ந்த தேசத் தூதர்­கள் தங்­க­ளின் சிறப்­பான ஆற்­றல்­களைப் பயன்படுத்தி, சமூ­கத்­தில் நிலவும் மின்­னி­லக்க இடை­வெ­ளியை இணைக்­கும் பால­மா­க பல வகையில் திறம்படச் செயல்­பட்­டி­ருக்­கி­றார்­கள்," என்று பாராட்டினார்.