சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஸ்) அறிமுகப்படுத்தியுள்ள புதிய தளத்தின் உதவியோடு அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கல்வி கற்கும் அதே சமயம், குறுகிய கால வேலைகளிலும் சேரத் தொடங்கியுள்ளனர்.
புதிய தளத்தை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று என்யு
எஸில் தொடங்கிவைத்தார்.
அத்துடன், 400,000 என்யுஎஸ் மாணவர்களையும் முன்னாள் மாணவர்களையும் இணைக்க இலக்கு கொண்டுள்ள கட்டமைப்புத் தளத்தை அவர் தொடங்கிவைத்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்டர்ன்ஷிப்-எஸ்-எ-சர்விஸ் என்று அழைக்கப்படும் 'வேலைத் தளம்' அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைப் பயன்படுத்தி என்யுஎஸ் மாணவர்கள் குறுகியகால வேலைகளில் சேர்ந்து அனுபவம் பெறலாம். அத்துடன், வருமானம் ஈட்டலாம்.
இத்திட்டம் மூலம் இவ்வாண்டு இறுதிக்குள் அவர்கள் பயிலும் வெவ்வேறு பாடங்களுக்குத் தேவையான மதிப்பெண்களை அவர்கள் பெறலாம்.
அவர்கள் பட்டம் பெறுவதற்கு இது பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனம் ஓரக்கல், பயணச் சேவை செயலியான கிராப், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உட்பட 60க்கும் அதிகமான தொழில்துறை பங்காளிகள் பங்கெடுக்கின்றன.
தனது மாணவர்களுக்குப் பல்வேறு துறைகளுக்கிடையிலான கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தித் தர என்யுஎஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் புதிய தளம் அமைகிறது என்று நேற்று நடைபெற்ற அறிமுக விழாவில் என்யுஎஸ் தலைவர் டான் எங் சாய் தெரிவித்தார்.
புதிய தளம் மாணவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகளை வழங்கு வதாக அவர் கூறினார்.
வெறும் கல்வி அறிவு மட்டும் பெறாமல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வேலைகளில் மாணவர்கள் அர்த்தமுள்ள அனுபவங்களைப் பெற இத்திட்டம் வழிவகுக்கிறது என்றார் அவர்.
இத்திட்டம் பட்டம் பெறும் மாணவர்களுக்குத் தேவையான திறன்
களையும் வேலை அனுபவத்தையும் தரும் என்று பேராசிரியர் டான் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, திறனாளர்
களுடன் என்யுஎஸ் சமூகத்திற்கு நேரடி தொடர்பைப் புதிய தளம் ஏற்படுத்தித் தரும் என்றார் அவர்.

