மத்திய சேமநிதிக் கழகத்தை ஏமாற்றி ஏறத்தாழ பத்து ஆண்டு களாக வழங்கீடுகளையும் பங்
களிப்புகளையும் பெற்றுக்கொண்ட குற்றத்துக்காக 71 வயது டான் கா போவுக்கு 18 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்
பட்டது.
தாமும் தமது மனைவியும் நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் என்றும் மாதச் சம்பளம் $1,000 என்று பொய் கூறியதாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவருக்கும் அவரது மனைவியான 70 வயது டோ போ சூவுக்கும் செயல்படாமல் இருக்கும் நிறுவனத்துக்கும் கழகம் $86,000க்கும் அதிகமான தொகையை வழங்கியது. ஏமாற்றிப் பெற்ற தொகையை டான் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அரசாங்க வழக்கறிஞர் தெரிவித்தார்.

