மானபங்க குற்றம்: திருந்தாத ஆடவருக்கு மீண்டும் சிறை

மானபங்க குற்றம்: திருந்தாத ஆடவருக்கு மீண்டும் சிறை

2 mins read
2229c699-f344-469b-aeb3-89cde14ceb72
-

தொடர்ந்து பல­முறை மான­பங்க குற்­றத்­தில் ஈடு­பட்டு 2018ஆம் ஆண்­டில் 21 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டும் திருந்­தாத ஆட­வ­ருக்கு இம்­முறை மூன்று ஆண்­டு­கள், ஏழு மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ர­ரான 49 வயது சிம் டெக் சாய் 2020ஆம் ஆண்­டில் மூன்று பெண்­களை மான­பங்­கம் செய்­தார்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட மூன்று குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

ஒரு­வ­ரின் விருப்­ப­மில்­லா­மல் அவ­ரைத் தொடு­வது குற்­றம் என்­றும் அவ்­வாறு செய்­தால் சிறைத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம் என்­றும் சிம்­முக்­குத் தெரி­யும் என்று அவ­ரைப் பரி­சோ­தனை செய்த மன­நல மருத்­து­வர் கூறி­யதை மாவட்ட நீ்திபதி மார்­வின் பே சுட்­டி­னார்.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக மாட்­டிக்­கொண்­ட­தாக மன­நல மருத்­து

­வ­ரி­டம் சிம் கூறி­யது தமக்குக் கவலை அளிப்பதாக நீதி­பதி தெரி­வித்­தார். தமது குற்­றச் செயல்களுக்கு சிம் வருத்­தம் தெரி­விக்­க­வில்லை என்­றார் அவர்.

2013ஆம் ஆண்­டி­லி­ருந்து மான­பங்க குற்­றம் புரிந்­த­தற்­காக சிம்­முக்கு ஏழு முறை சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்­ஆர்டி ரயி­லில் பெண் ஒரு­வரை சிம் மான­பங்­கம் செய்­த­போது கையும் கள­வு­மா­கப் பிடிப்­பட்­டார். அவர் அந்­தப் பெண்ணை மான­பங்­கம் செய்­வ­தைக் காட்­டும் காணொளி இணை­யத்­தில் வலம் வந்­தது.

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி­யன்று 23 பெண்ணை சிம் மான­பங்­கம் செய்­தார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி­யன்று பேருந்து ஒன்­றில் 15 வயது சிறு­மியை சிம் மான­பங்­கம் செய்­தார்.

ஆகஸ்ட் 28ல் பேருந்து ஒன்­றில் 17 வயது சிறு­மியை அவர் மான­பங்­கம் செய்­தார்.